நாங்கள் தான் காவலாளி... இல்ல, நாங்க தான் காவலாளி... பாஜக vs திமுக
தூத்துக்குடி: நாட்டின் காவலாளி யார் என்பதில், பாரதிய ஜனதா கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. டீக்கடைக்காரரில் இருந்து காவலாளி என்ற பிரச்சாரத்திற்கு பாஜக தாவியுள்ளது.
இந்தநிலையில், நாட்டின் பாதுகாவலர் என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளி என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே சூடான விவாதம் தொடங்கி உள்ளது.
தியாகங்களால், ரத்த சரித்திரத்தால் உருவான தொழிலாளர்கள் தினம், இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தூத்துக்குடியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மே தினப் பேரணியில் ஆயிரக்கணக்கான தி.மு.க.வினர் கலந்துகொண்டனர்.

ஸ்டாலின் பேரணி
பேரணியை தொடர்ந்து, சிதம்பர நகர் மைதானத்தில் நடைபெற்ற மே தினப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, நாட்டின் 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் 4,5 கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக அடகு வைக்கப்பட்டுள்ளது என்றார்.

திமுக தான் காவலாளி
விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; நரேந்திர மோடி அல்ல என்று கூறிய மு.க.ஸ்டாலின், கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தார். பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிட்டுள்ள, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில், மு.க. ஸ்டாலின் இவ்வாறு பேசியுள்ளார். இதுவரை, எந்த ஒரு அரசியல் விமர்சனத்திற்கும், பதிலடி கொடுக்கும் தமிழிசை சௌந்தரராஜன், இதற்கும், கருத்து கூற தவறமாட்டார் என்றே கருதலாம்.

'சௌகிதார்' மோடி
மக்களவைத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, திடீரென தனது பெயருக்கு முன்னால் 'சௌகிதார்' மோடி என சேர்த்துக்கொண்டார். அதாவது, மக்களின் காவலாளி. இதனை பார்த்து, பாஜகவினர் மோடியைப் போல் சௌகிதார் என்பதை தங்களது பெயருக்கு முன்னால் சமூக வலைதளங்களில் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதுகுறித்து, எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

பாஜக vs திமுக
இந்தநிலையில், காவலாளி யார் என்பதில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாவலர் என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளி என்று ஒருபுறம் ஸ்டாலின் கூறி வருகிறார். முன்னதாக, சபாநாயகர் தனபால் மீது தமிழக சட்டபேரவைக்கு நம்பிக்கையில்ல என எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதற்கு, உங்கள் (ஸ்டாலின்) மீது தமிழக மக்களுக்கே நம்பிக்கையில்லை. எனவே தான் எதிர்க்கட்சியில் மக்கள் அமர வைத்துள்ளனர். வெளிநடப்புகள், சட்டைகிழிப்பு, போட்டி சட்டமன்றம் நடத்தியும் பயனில்லை. இந்த நம்பிக்கையில்லா தீர்மானமும் தங்களுக்கு மக்கள் நம்பிக்கையை பெற்றுதராது என்று தமிழிசை பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வராத காங்கிரஸ் - திமுக சீட் ஷேரிங் பிரச்னை.. காங். தேர்வு செய்யும் 28 தொகுதிகளால் சிக்கல் -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
தமிழக தேர்தல் வரலாறு: கருணாநிதிக்கு உதயசூரியன்.. நெடுஞ்செழியனுக்கு சேவல்.. திமுகவின் முதல் சம்பவம்! -
காமராஜர் ஆட்சிக்கு வேட்டு.. இந்திரா ஆட்சிக்கு ஓட்டு.. திமுக ஆடிய டபுள் கேம்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்! -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!











Click it and Unblock the Notifications