17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த காதலன்.. தற்கொலைக்கு முயன்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பலி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவன் ஒருவன் ஏமாற்றியதால் மனம் உடைந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த ஆத்தூர்குப்பம் பகுதியில் 17 வயது பள்ளி மாணவி ஜங்களாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த சேகரின் மகன் ராகுல்காந்தி (20).

இவர் தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். காதலிப்பதாக கூறி ராகுல்காந்தி அடிக்கடி அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறப்பு வகுப்புகாக பள்ளிக்கு சென்ற மாணவி வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது தாயார் அக்கம்பக்கத்தில் விசாரித்துள்ளார்.

அப்போது கோவிந்தசாமி மகன் ஜீவா என்பவரது வீட்டில் மாணவியை ராகுல்காந்தி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டிற்கு செல்லாமல் இருந்த மாணவியை தேடி அவரது தாயார் சென்றபோது ஊரே வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் மாணவியை உடனடியாக மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இதுகுறித்து நாட்றம்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள ராகுல் காந்தி, ஜீவா உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications