ராணிப்பேட்டை வீட்டில் 21 சவரன் தங்கம்.. 2 ஏக்கர் நிலப்பத்திரம்.. பீரோவை உடைக்காமலேயே ட்விஸ்ட்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் வீட்டில் உரிமையாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது பீரோவில் இருந்த 21 சவரன் தங்க நகை பணம் 2 ஏக்கர் நிலம் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. வீட்டின் கதவு பூட்டு பீரோ லாக்கர் உடைக்காமலேயே நகை பணம் நிலபத்திரம் காணாமல் போய் இருப்பதாக வந்திருக்கும் புகார் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் கிராம பகுதியை சேர்ந்த 52 வயதாகும் பழன என்ற விவசாயி வசித்து வருகிறார். இவரது மனைவி பராசக்தி(45) இவர்களுக்கு கோபி கிருஷ்ணன்(26) என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டு குடும்பத்தினர் வீடு திரும்பி உள்ளனர். நேற்று இரவு பழனி மற்றும் பராசக்தி ஆகிய இருவரும் வீட்டின் நுழைவாயில் வராண்டாவில் உறங்கியுள்ளனர் இவர்களது மகன் கோபி கிருஷ்ணன் வீட்டில் மேலே இருக்கும் அறையில் உறங்கியதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக மறுநாள் காலை குடும்ப செலவிற்காக பணத்தை எடுப்பதற்காக பராசக்தி பீரோவை திறந்து பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 21 சவரன் தங்க நகை 7 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் 2 ஏக்கர் நிலத்திற்கான பத்திரம் ஆகியவை பீரோவில் இருந்து திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பாக அவளுர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வீட்டின் கதவு மற்றும் பீரோ போன்றவை உடைக்கப்படாமல் இருக்கும் நிலையில் நகை பணம் மற்றும் நில பத்திரம் காணாமல் போயிருப்பதாக புகார் தெரிவித்திருக்கும் நிலையில் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் மருத்துவமனையில் ஆய்வு
மருத்துவர்கள் தங்களுடைய பணிகளை அர்பணிப்புடன் செய்ய வேண்டும் நோயாளிகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் என்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று அதிரடியாக களத்தில் இறங்கி அரசு மருத்துவமனையில் ஆய்வை நடத்தி உள்ளார் ஆட்சியர் பிரியா
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ராணிப்பேட்டையில் 7-வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள பிரியா திடீரென அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்..
அப்போது ஆய்வில் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் அறை, மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் வருகை பதிவேடு, பயோமெட்ரிக் வருகை பதிவேடினை ஆய்வு செய்து வருகை புரியாதவர்கள் குறித்தும் விடுமுறை எடுத்தவர்கள் குறித்தும் கேட்டறிந்தார்
தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்கள், நோயாளி பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு அறுவை சிகிச்சைகள் அதிகமாக நடைபெறுவது குறித்து அதற்கான காரணங்களை கேட்டறிந்தார்..
இதனைத்தொடர்ந்து குழந்தைகள் நல பிரிவு, ஆண்கள், பெண்கள் உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, ரத்த வங்கி,சிடி ஸ்கேன் மையம், பிசியோதெரபி, டயாலிசிஸ் மையம், சித்தா பிரிவு, மனநல பிரிவு, சமையல் கூடம், குழந்தைகள் மன வளர்ச்சி குறைப்பாட்டு சிகிச்சை பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு, தொற்றா நோய் பரிசோதனை பிரிவு, மருந்தகம், எலும்பு சிகிச்சை பிரிவு, ENT, கண் சிகிச்சை பிரிவு போன்ற அனைத்து சிகிச்சை மையங்களையும், அதைப்போல் மருத்துவமனை வளாகம் முழுவதும் சுற்றிப் பார்த்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியதோடு நோயாளிகளிடம் சிகிச்சைகள் வழங்கப்படுவது குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்தார் உடன் மாவட்ட மருத்துவமனை உஷாநந்தினி உட்பட மருத்துவர்கள் செவிலியர்கள் பணியாளர்கள் என பலர் உடனிருந்தனர்.
-
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
கிலோவுக்கு 1000000 தள்ளுபடி! 15% இறக்குமதி வரி.. இந்தியாவில் மீண்டும் தலைதூக்கும் தங்கக் கடத்தல்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்














Click it and Unblock the Notifications