வேலூரில் வேகமாக வந்த ரயில்.. தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உடல் நசுங்கி பலி!
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் 3 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் 3 பேர் ரயில் மோதி பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையத்தில் தினசரி அதிக எண்ணிக்கையிலான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். பொதுவாக இங்கு ரயில்வே கேட் இருந்தும் கூட மக்கள், விதிகளை மீறி தண்டவாளத்தில் இறங்கி அதை கடப்பது வழக்கம்.

ரயில்வே நிர்வாகம் பல முறை எச்சரிக்கை தெரிவித்தும், மக்கள் தொடர்ந்து விதிகளை மீறி இப்படி தண்டவாளத்தை கடப்பது நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மூன்று பேர் தண்டவாளத்தை கடக்கும் போது அவர்கள் மீது ரயில் ஏறியது.
வேலூர் நோக்கி சென்று கொண்டு இருந்த எக்ஸ்பிரஸ் ரயிலை பார்க்காமல், இந்த 3 பேறும் தண்டவாளத்தை கடக்க முயன்று இருக்கிறார்கள். இதில் அவர்கள் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியான மூன்று பேரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications