டீ குடிக்க வருபவர்களுக்கு ப்ரீயா தூக்குவாளி.. அசத்தும் ஆம்பூர் சேட்டு!
கடைக்கு வருபவர்களுக்கு எவர்சில்வர் தூக்குவாளி தருகிறார் ஆம்பூர் சேட்டு.
ஆம்பூர்: டீ குடிக்க வர்றவங்களுக்கு ஃப்ரீயா தூக்குவாளிகளை கொடுத்து அசத்தி வருகிறார் ஆம்பூர் சேட்டு!
பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் சொல்லிவிட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் மக்கள் எல்லோருமே இதை சீரியஸாக எடுத்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
முடிந்த அளவுக்கு அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர், பிளாஸ்டிக்கை ஒழிக்க சுயமாகவே பல நல்ல ஐடியாக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

டிபன் பாக்ஸ்கள்
ஒருசில ஹோட்டல்களில் டிபன் பாக்சை கல்லா முன்னாடி அடுக்கி வைத்து கொண்டு, அதில் சாப்பாடு பார்சல் செய்து தருகிறார்கள். இதற்கு முன்பணம் வாங்கி கொண்டோ அல்லது விலைக்கோ தந்து வருகிறார்கள். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிளாஸ்டிக் கப்
ஆனால் ஆம்பூர் சேட் எல்லாரையும் விட ஒரு படி மேல போய்விட்டார். ஆம்பூரில் நியூ பெத்லகேம் பகுதியில் டீ கடை வைத்திருப்பவர்தான் சேட்டு. 4 வருடமாக இந்த கடையை நடத்தி வருகிறாராம். பொதுவாக டீ கடைகளில் கப்களில் டீ நிரப்பி தருவார்கள். சுட சுட வழிந்து நிறையும் அந்த பிளாஸ்டிக் கப்பை பிடிக்க வாட்டம் இல்லாமல், கீழேயும் மேலயும் ஊத்திக் கொண்டு குடிச்சு முடிச்சி கசக்கி எறிந்துவிட்டு வருவோம்.

சேட்டு - வேற லெவல்
ஆனால் சேட் வேற லெவல்ல நின்னு யோசிச்சிருக்கார். டீக்கடையில் தனது சொந்த செலவில் எவர்சில்வர் தூக்குவாளிகளை வாங்கி வைத்து அதில் டீ கொடுத்து வருகிறார். அடுக்கி வைத்திருக்கிறார். வாடகைக்கு இல்லை...

150 தூக்குவாளி
வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தனது கடைக்கு வரும் ரெகுலர் கஸ்டமர்களுக்கு எவர்சில்வர் தூக்குவாளிகளை இலவசமாக வழங்கி வருகிறார். இதுவரைக்கும் 150 தூக்குவாளிகளை தந்திருக்கிறார் சேட்டு.

கஸ்டமர்கள் முக்கியம்
அதோடு டீ பார்சல் கேட்டு வருபவர்களுக்கு இந்த தூக்குவாளியில் டீ ஊற்றி கொடுத்து அனுப்புகிறார். இதுபற்றி சேட்டு சொல்லும்போது, "கஸ்டமர்கள் எங்களை விட்டு போய்டக்கூடாது என்பதற்காகவும் இந்த ஐடியாவை செய்து வருகிறோம், எங்களுக்கு இதனால் நல்ல பேரும் கிடைச்சிட்டு வருது" என்கிறார்.
எவர்சில்வர் தூக்குகளை ஃப்ரீயா தந்துட்டு இருக்கும் டீக்கடை ஓனர் சேட்டுக்கு கூட்டம் கூடிவருகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications