டீ குடிக்க வருபவர்களுக்கு ப்ரீயா தூக்குவாளி.. அசத்தும் ஆம்பூர் சேட்டு!
கடைக்கு வருபவர்களுக்கு எவர்சில்வர் தூக்குவாளி தருகிறார் ஆம்பூர் சேட்டு.
ஆம்பூர்: டீ குடிக்க வர்றவங்களுக்கு ஃப்ரீயா தூக்குவாளிகளை கொடுத்து அசத்தி வருகிறார் ஆம்பூர் சேட்டு!
பிளாஸ்டிக்கை பயன்படுத்த வேண்டாம் என்று அரசாங்கம் சொல்லிவிட்டது. இதனால் கடந்த 1-ம் தேதி முதல் மக்கள் எல்லோருமே இதை சீரியஸாக எடுத்து கடைப்பிடித்து வருகிறார்கள்.
முடிந்த அளவுக்கு அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர், பிளாஸ்டிக்கை ஒழிக்க சுயமாகவே பல நல்ல ஐடியாக்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

டிபன் பாக்ஸ்கள்
ஒருசில ஹோட்டல்களில் டிபன் பாக்சை கல்லா முன்னாடி அடுக்கி வைத்து கொண்டு, அதில் சாப்பாடு பார்சல் செய்து தருகிறார்கள். இதற்கு முன்பணம் வாங்கி கொண்டோ அல்லது விலைக்கோ தந்து வருகிறார்கள். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பிளாஸ்டிக் கப்
ஆனால் ஆம்பூர் சேட் எல்லாரையும் விட ஒரு படி மேல போய்விட்டார். ஆம்பூரில் நியூ பெத்லகேம் பகுதியில் டீ கடை வைத்திருப்பவர்தான் சேட்டு. 4 வருடமாக இந்த கடையை நடத்தி வருகிறாராம். பொதுவாக டீ கடைகளில் கப்களில் டீ நிரப்பி தருவார்கள். சுட சுட வழிந்து நிறையும் அந்த பிளாஸ்டிக் கப்பை பிடிக்க வாட்டம் இல்லாமல், கீழேயும் மேலயும் ஊத்திக் கொண்டு குடிச்சு முடிச்சி கசக்கி எறிந்துவிட்டு வருவோம்.

சேட்டு - வேற லெவல்
ஆனால் சேட் வேற லெவல்ல நின்னு யோசிச்சிருக்கார். டீக்கடையில் தனது சொந்த செலவில் எவர்சில்வர் தூக்குவாளிகளை வாங்கி வைத்து அதில் டீ கொடுத்து வருகிறார். அடுக்கி வைத்திருக்கிறார். வாடகைக்கு இல்லை...

150 தூக்குவாளி
வாடிக்கையாளர்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தனது கடைக்கு வரும் ரெகுலர் கஸ்டமர்களுக்கு எவர்சில்வர் தூக்குவாளிகளை இலவசமாக வழங்கி வருகிறார். இதுவரைக்கும் 150 தூக்குவாளிகளை தந்திருக்கிறார் சேட்டு.

கஸ்டமர்கள் முக்கியம்
அதோடு டீ பார்சல் கேட்டு வருபவர்களுக்கு இந்த தூக்குவாளியில் டீ ஊற்றி கொடுத்து அனுப்புகிறார். இதுபற்றி சேட்டு சொல்லும்போது, "கஸ்டமர்கள் எங்களை விட்டு போய்டக்கூடாது என்பதற்காகவும் இந்த ஐடியாவை செய்து வருகிறோம், எங்களுக்கு இதனால் நல்ல பேரும் கிடைச்சிட்டு வருது" என்கிறார்.
எவர்சில்வர் தூக்குகளை ஃப்ரீயா தந்துட்டு இருக்கும் டீக்கடை ஓனர் சேட்டுக்கு கூட்டம் கூடிவருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications