குறைகளை சொல்லுங்க... திண்ணை.. மரத்தடி.. பெட்டிக்கடையில் அமர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின்
Recommended Video
வேலூர்: மரத்தடி, பெட்டிக்கடையில் அமர்ந்து பொதுமக்களிடம் குறைகள் கேட்டறிந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் வரும் 5ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க சார்பில் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக பிரசாரம் மேற்கொண்டார்.
இன்று காலை வேலூரில் பல இடங்களில் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். வேலூர் ராமநாயக்கன் பட்டி மற்றும் அதன் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாக்கு சேகரிப்பு
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவர், தெக்குப்பட்டி, ராமநாயக்கன் பேட்டை, திம்மாம்பேட்டை ஆகிய இடங்களில் மரத்தடி, பெட்டிக்கடை மற்றும் திண்ணையில் அமர்ந்து, பொதுமக்களிடம் குறைகள் கேட்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் உங்கள் பிரச்னைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்று உறுதியளித்தார்.

உழவர் சந்தை
காலையில், டீ-சர்ட், பேன்ட், ஷூ அணிந்துகொண்டு வேலூர் டோல்கேட் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு சென்றார். ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வியாபாரிகளிடம் கைகுலுக்கி உதய சூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டார்.

இளைஞர்களுடன் செல்பி
அதே சமயம், டீ கடையில் டீ குடித்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலினுடன் செல்பி எடுக்க இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். அவர்களை கிட்ட அழைத்து, செல்பி எடுத்துக்கொண்டார்.

மு.க. ஸ்டாலின் உறுதி
பின்னர், அரசு பேருந்தில் ஏறி பயணிகளிடமும் தி.மு.க-வின் சாதனைகளை எடுத்துக் கூறினார். மேலும், விரைவில் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும். அப்போது முதலாவதாக நகை கடன் தள்ளுபடி செய்யப்படும். தொடர்ந்து விவசாய கடன், மாணவர்களின் கல்வி கடனை தள்ளுபடி செய்வேன் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications