ஆட்டை கடித்து குதறிய நாய்.. பெண் உரிமையாளரை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்- திருப்பத்தூரில் டென்ஷன்!
திருப்பத்தூர் : வாணியம்பாடி அருகே வளர்ப்பு நாய், ஆட்டை கடித்ததால், பஞ்சாயத்தார் முன்பாக நாயின் பெண் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செல்லப்பிராணிகள் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலமாகி விடுவார்கள். ஒரு சிலரைத் தவிர செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பெரும்பாலோனோருக்கு ஆர்வமும், விருப்பமும் அதிகமாக இருக்கும். அதிலும் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் காட்டுகின்றனர். இந்தப் பிராணிகளால் சில சமயத்தில் அக்கப்பக்கத்தாருடன் பிரச்னையும் ஏற்படுவது வழக்கம். அதுபோன்ற சம்பவம், வாணியம்பாடி அருகே அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பாப்பா நேரி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி தேன்மொழி என்பவர் தனது வீட்டில், செல்லப்பிராணியாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதேபோல் வேப்பமர சாலை பகுதியை சேர்ந்த பவுன் என்ற பெண் ஆடுகளை வளர்த்து வருகிறார். அவர் தன்னுடைய ஆடுகளை பாப்பா நேரி பகுதியில் தேன்மொழி வீட்டின் அருகில் விவசாய நிலத்தில் ஆடுகளை மேச்சலுக்காக விட்டுள்ளார்.
அப்போது தேன்மொழியின் வளர்ப்பு நாய் பவுன் என்பவரின் ஆட்டை கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் பவுன் மற்றும் அவரது உறவினர்கள் தேன்மொழியிடம் சென்று, தங்களது ஆட்டை, நாய் கடித்துள்ளதாகவும் அதற்கு உரிய நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். இதற்கு தேன்மொழி மறுத்ததால் கிராமத்தில் பஞ்சாயத்து கூட்டி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
பஞ்சாயத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, ஆட்டின் உரிமையாளரின் உறவினர்கள் தேன்மொழி மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தேன்மொழியை அவரது உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வளர்ப்பு நாய், ஆட்டை கடித்ததால், பஞ்சாயத்தார் முன்பாகவே நாயின் பெண் உரிமையாளர் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications