அரசு கொடுக்கும் 1000 ரூபாய்.. மாணவிகள் எப்படி செலவு பண்ணனும்.. துரைமுருகன் பேச்சால் கடும் சர்ச்சை
வேலூர்: அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தை கல்லூரி மாணவிகள் எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பதை அமைச்சர் துரைமுருகன் பேசிய பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.சேகர், அமைச்சர் துரைமுருகன் பேசும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் அமைச்சர் துரைமுருகன் பேசிய வீடியோ என்று கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட வீடியோவில் அமைச்சர் துரைமுருகன் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது.
என்ன பேசினார் என்பதை இப்போது பார்ப்போம். அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "செப்டம்பர் 15ம் தேதி முதல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் மாதம் கொடுக்க போகிறோம். நீங்களே செலவுக்கு வாங்கிக்கொள்ளலாம். அவர் (கணவன்) சம்பாதிப்பதை அங்கேயே உட்கார்ந்து சாப்பிட்டு வந்திடலாம். ஆகையினால் குடும்பத்தை காப்பாற்றுவதற்கு இந்த தொகை உதவும்.
உங்கள் பெண் கல்லூரியில் படிக்கிறார் என்றால், வேலூர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார் என்றால், அவங்களுக்கும் ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்கிறோம். உங்க அம்மாவிடம் போய் பஸ்சுக்கு கேட்காதே.. நீ பசங்களோட சினிமாவுக்கு போனீன்னா அங்க பணம் கேட்காதே.. ஒரு செல்போன் வாங்கி வைத்துக்கொள்..
நைசாக பேசு, என்ன வேணும்னாலும் பண்ணு, அதுக்கும் ஒரு ஆயிரம் கொடுக்கிறோம்" இவ்வாறு துரைமுருகன் பேசும் வீடியோவை பாஜகவைச் சேர்ந்த எஸ்ஆர் சேகர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்து பலரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications