அத்துமீறியது ஏன்... பதில் தேவை... வாணியம்பாடி அதிகாரிக்கு மனித உரிமை ஆணையம் கிடுக்கிப்பிடி
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி ஆணையர் மீது மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஆய்வு நடத்தச் சென்ற போது அத்துமீறலில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் பழக்கடைகளை சேதப்படுத்தியதோடு அங்கிருந்த வியாபாரிகளை தரக்குறைவாக நடத்தினார். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் அந்த அதிகாரி மீது வழக்குத் தொடர்ந்து விசாரணையை தொடங்கியுள்ளது.

இன்னும் 14 நாட்களுக்குள் பழக்கடைகளை சேதப்படுத்தியது தொடர்பாக நகராட்சி ஆணையர் சுசில் தாமஸ் மாநில மனித உரிமை ஆணையத்திடம் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறலுக்கு எதிராக பல்வேறு தரப்பில் இருந்து கண்டனக் குரல்கள் எழுந்த நிலையில் அந்த அதிகாரி இன்று வருத்தம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் மாநில மனித உரிமை ஆணையம் இதில் தலையிட்டுள்ளதால் இந்த விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இதனிடையே சிசில் தாமஸின் செயல்பாடுகள் வரம்பு மீறிய ஒன்று என்றும், இது குறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் ஆணை பிறப்பித்துள்ளார்.
வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் கிடுக்கிப்பிடி போட்டுள்ளதை மற்ற உள்ளாட்சி அதிகாரிகளும் கவனிக்கத் தவறவில்லை. இதனிடையே இந்த நிகழ்வு உணர்த்துவது என்னவென்றால், வரம்பு மீறி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டால் அது கேடில் கொண்டு சென்று விடும் என்பது தான். வியாபாரிகளே தவறு செய்திருந்தாலும் கூட அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கலாம், அல்லது எச்சரிக்கை விடுத்திருக்கலாம். அதைவிடுத்து பழக்கடை முழுவதுமே துவம்சம் செய்தது மனிதநேயத்திற்கு அழகில்லாதது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications