தேர்தல் சூடுபிடிக்கும் வேலூர் தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை
Recommended Video
வேலூர்: வேலூர் மக்களவை தொகுதியில் மீண்டும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் வேலூரில் துரைமுருகன் வீட்டிலும் அவரது மகனும் திமுக வேட்பாளருமான கதிர்ஆனந்தின் கல்லூரி மற்றும் பள்ளியில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
இங்கிருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் திமுக பிரமுகர் ஒருவரது சிமெண்ட் குடோனிலும் சோதனை நடைபெற்றது. இங்கு கட்டுக் கட்டாக பணம், அதன் உறையின் மீது தெருவின் பெயர், வார்டு எண் ஆகியன எழுதப்பட்டிருந்தது கைப்பற்றப்பட்டது.

37 இடங்களில் வெற்றி
இதையடுத்து அந்தத் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்தானது. பின்னர் மீதமுள்ள 38 தொகுதிகளுக்கும் கடந்த 18-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக ஒரு இடத்திலும் திமுக 37 இடங்களிலும் வெற்றி பெற்றது.

தேர்தல் ஆணையம்
இந்த நிலையில் வேலூருக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக சார்பில்
இந்த அறிவிப்பு வந்த நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளரும் புதிய நீதி கட்சியின் தலைவருமான ஏசி சண்முகமும் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.

வருமான வரித் துறை
தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூரில் திமுக பிரமுகரின் தம்பி ஏழுமலை வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது. அப்போது ஒரு கட்டப்பையில் ரூபாயை கட்டி வெளியில் வீசியுள்ளனர். அதனை வருமானவரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து பையில் பார்த்த போது ரூ.28 லட்சம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து விசாரித்த போது அது தன்னுடைய பணம் என்பதை ஏழுமலை ஒப்புக் கொண்டார். அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டதாக என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே திமுக பிரமுகர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டால்தான் அங்கு தேர்தல் ரத்தானது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications