Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜோஸ் ஆலூக்காஸ் நகைக்கடை கொள்ளை: சிக்கிய சிங்க முகமூடி கொள்ளையன்! சுடுகாட்டில் பதுக்கிய நகை மீட்பு

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் மயானத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Recommended Video

    பரபரப்பு சிசிடிவி வீடியோ: சிங்க முகமூடி, கோட் அணிந்து நகைக்கடையில் கொள்ளை... பெங்களூரு, ஆந்திராவுக்கு விரைந்த தனிப்படை!

    வேலூர் மாநகரின் முக்கிய பகுதியான தோட்டப்பாளையம் தர்மராஜா கோவில் அருகில் அமைந்துள்ள ஜோஸ் ஆலுக்காஸ் பிரபலமான தனியார் நகை கடை. தரைதளம் உட்பட 5 அடுக்குகள் கொண்ட நகை கடையில் தரை தளத்தில் வைரம் மற்றும் தங்க நகைகளும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    கடந்த புதன்கிழமையன்று இரவு நகை கடையை பூட்டிவிட்டு சென்ற ஊழியர்கள் இன்று காலை வந்து கடையை திறந்து பார்த்த போது தரைதளத்தில் உள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ள அலமாரிகளும், லாக்கரும் உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டிருந்தன. நகை கொள்ளை பற்றி வேலூர் தெற்கு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    கடைக்குள் புகுந்த கொள்ளையன்

    கடைக்குள் புகுந்த கொள்ளையன்

    கடையின் பின்பக்கம் உள்ள காற்று வெளியேறும் வெண்டிலேட்டர் குழாய் மூலம் கொள்ளையர்கள் தரைதளத்தின் உள்ளே புகுந்து பால் சீலிங்கை உடைத்து குதித்து கொள்ளை நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது ஒல்லியான முகமூடி அணிந்த உருவம் ஒன்று கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களுக்கு ஸ்பிரே அடிப்பது பதிவாகியிருந்தது.

    சிங்கமுகமூடி கொள்ளையன்

    சிங்கமுகமூடி கொள்ளையன்

    கொள்ளை போன நகை கடைக்கு அருகில் தடையங்கள், கைரேகைகள் சேகரிப்பட்டன. கொள்ளை நடந்த கடையின் சுவர் ஓரம் ஒரு தலை விக் கண்டெடுக்கப்பட்டது. கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த வேலூர் வடக்கு காவல் துறையினர் வேலூர் சரக டிஐஜி ஏஜி பாபு உத்தரவின்பேரில் 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

    போலீஸ் ஆய்வு

    போலீஸ் ஆய்வு

    கொள்ளை சம்பவத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்தும், சம்பவ இடத்தில் கிடைக்கப்பெற்ற தடயங்களை வைத்து தேடி வந்தனர். நகைக்கடையில் சேகரிக்கப்பட்ட கைரேகை தடயங்களை வைத்து காவல்துறையினர் பழைய குற்றவாளிகளை ஆராய்ந்து வந்தனர்.மேலும் கடைக்கு அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்தனர்.

    சிங்க முகமூடி கொள்ளையன்

    சிங்க முகமூடி கொள்ளையன்

    அப்போது, மெலிதான உடல் கொண்ட நபர் ஒருவர் தோளில் பையை மாட்டிக்கொண்டு பேருந்து நிலையம் சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இதையடுத்து பழைய குற்றவாளிகளின் கைரேகையை போலீசார் ஆராய்ந்தனர். முகமூடி அணிந்த நபரின் உடல் அமைப்பு அணைக்கட்டு, பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையம் பகுதியை சேர்ந்த டீக்காராமன் என்பவரின் உடல் அமைப்பு மற்றும் கைரேகைகளுடன் ஓரளவு ஒத்துப்போனது.

    நகைகளைக் பதுக்கிய கொள்ளையன்

    நகைகளைக் பதுக்கிய கொள்ளையன்

    டீக்காராமனை கைதுசெய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் நகைகள் திருடப்பட்ட கடைக்கு டிக்காராமை அழைத்துச்சென்ற போலீசார், சிங்க முகமூடியையும் அணிவித்து ஆராய்ந்தனர். டீக்காராமனின் தாய், மனைவி ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜோஸ் ஆலுக்காஸ் கடையில் கொள்ளையடித்த நகைகளை உருக்கி மயானத்தில் புதைத்து வைத்திருப்பதாக கொள்ளையன் கூறவே அந்த நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+