ஜெயிலில் கம்பி எண்ணி களி திங்கும் பெண் அதிகாரி! வில்லங்கமான விஷயம்! சிக்கலில் மாஜி அதிமுக அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: கடன் மோசடி வழக்கில் கைதாகியுள்ள வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொதுமேலாளர் உமா மகேஸ்வரியால் அதிமுக மாஜி அமைச்சர் ஒருவருக்கும் சிக்கல் வரலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு பெண் அதிகாரி இவ்வளவு துணிச்சலாக ஒரு கோடி ரூபாய் வரை பண மோசடி செய்திருக்கிறார் என்றால் அதன் பின்னணியில் யாரெல்லாம் இருந்திருக்கக் கூடும் என்ற விவரத்தை அலசி ஆராய்ந்து வருகிறது வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ்.

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவின் கவனத்திற்கு இந்த விவகாரம் எப்படி வராமல் இருந்திருக்கும் என்றும் ஒரு வேளை புகார் வந்தும் அதனை அவர் கிடப்பில் போட்டாரா என்பது பற்றியும் துப்பு துலக்கி வருகிறது தனி குழு.

வேலி பயிரை மேய்ந்தது

வேலி பயிரை மேய்ந்தது

வேலியே பயிரை மேய்ந்த கதையாக வேலூர் மத்திய மாவட்ட கூட்டுறவு வங்கியில் மேலாளராக இருந்த உமா மகேஸ்வரி, மகளிர் குழுக்களுக்கு கடன் கொடுத்ததாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம் தமிழகம் தழுவிய அளவில் கவனம் ஈர்த்தது. இப்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்தாலும், அவருக்கு இவ்வளவு துணிச்சல் எங்கிருந்தது வந்தது யார் கொடுத்த தைரியம் இதுவென்று தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 வில்லங்கம் வரலாம்

வில்லங்கம் வரலாம்

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த செல்லூர் ராஜூவுக்கு, தனது துறையில் நடைபெற்ற இவ்வளவு பெரிய மோசடி எப்படி தெரியாமல் இருந்திருக்கும் அல்லது தெரிந்தும் கண்டும் காணாமல் விட்டாரா? அப்படியானால் அதற்கு பின்னணி காரணம் என்ன? என வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் ஜல்லடை போட்டு அலசி ஆராய்ந்து வருகிறது. மொத்தத்தில் பெண் அதிகாரி செய்த கடன் மோசடியால் மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கும் வில்லங்கம் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

புரோமோஷன் எப்படி

புரோமோஷன் எப்படி

தந்தை இறந்ததால் கருணை அடிப்படையில் கூட்டுறவுத்துறையில் பணிக்கு சேர்ந்த உமாமகேஸ்வரி, கருணையேயின்றி அப்பாவி கிராமப்புற பெண்கள் பெயரில் மோசடி செய்திருப்பது தான் இதில் ஹைலைட். குடியாத்தத்தில் கிளை மேலாளராக இருந்த இவருக்கு எந்த தகுதியின் அடிப்படையில் மாவட்ட கூட்டுறவு வங்கி மேலாளர் பதவி வழங்கப்பட்டது என்ற விசாரணையும் தொடங்கப்படவுள்ளது. இதனால் மாஜி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2018-2019

2018-2019

2018 -2019 காலகட்டத்தில் நடைபெற்ற இந்த மோசடி இப்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இன்னும் இதைப்போல் எத்தனை மோசடிகள் வெளிவர உள்ளதோ, அத்தனை மோசடிகள் மீது கடும் ஆக்‌ஷன் இருக்க வேண்டும் என ஆட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாம். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நகை கடன் மோசடி விவகாரம் விஸ்பரூபமாகிய நிலையில் இப்போது கூட்டுறவுத்துறை அதிகாரிகள் ரூபத்தில் புது புது வில்லங்கங்கள் வரத் தொடங்கியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+