Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினகரனுக்கு எந்தத் தகுதியும் இல்லை.. மீறினால் வழக்கு தான்.. எச்சரிக்கும் கே.பி.முனுசாமி!

Subscribe to Oneindia Tamil

வேலூர்: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அதிமுகவைப் பற்றியும், எங்களைப் பற்றியும் பேசுவதற்கு எந்தத் தகுதியும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Recommended Video

    டிடிவிய கோர்ட்ல நிக்க வச்சுருவோம்! சந்தர்ப்பவாதி சசிகலா..யார் சொல்றது தெரியுமா? கே.பி.முனுசாமி தான்!

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்தில் இருக்கும் சூழலில், வரும் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுக்குழுவை நடத்தும் விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் வேலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    TTV Dhinakaran has no right to talk about AIADMK says Ex minister KP Munusamy in Vellore

    அப்போது அவர் கூறுகையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி, வரும் 11ம் தேதி, ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில், உறுதியாக நடைபெறும். அதன்பின்னர், கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி உறுதியாக வருவார். அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார். பொதுக்குழுக்கூட்டம் நடத்துவதற்கு தடை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, பொதுக்குழு ஆன்லைன் வழியாக இல்லாமல், நேரடியாகவே நடைபெறும் என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், தற்போது விரக்தியின் எல்லையில் வைத்திலிங்கம் இருக்கிறார். அதேபோல் டிடிவி தினகரனும் பேசியிருக்கிறார். அவர்களுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். இவர்கள் எல்லாம் அதிமுகவில், தொண்டர்களாக இருந்தவர்கள். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளனர். அதிமுக ஆட்சியிலும் பொறுப்பு வகித்தவர்கள். இப்படி வந்த இவர்கள், ஒரு கட்சி தொண்டன் மீது இவ்வளவு பெரிய அபாண்டமான குற்றச்சாட்டை பதிவு செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது.

    அதிலும் வைத்திலிங்கம் கூறும்போது மிகமிக வேதனையாக இருக்கிறது. நேற்றுவரை அவர் இந்த கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். அவரோடு நாங்கள் பயணித்தவர்கள். அவ்வாறு பயணித்த எங்களை, இதுபோல குற்றம் சாட்டுவதை அவருடைய மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.
    டிடிவி தினகரன் சேலத்தில் 25 லட்சத்தில் இருந்து 5 கோடி வரை கொடுத்துள்ளதாக பேசியிருக்கிறார்.

    இதுபோல் மீண்டும் ஒருமுறை அவர் பேசினால், நிச்சயமாக நீதிமன்றத்தில் நிற்க கூடிய நிலை அவருக்கு வந்துவிடும். அவர் இந்த கட்சிக்காக எந்த தியாகமும் செய்யாதவர். இந்தக் கட்சியால் பலன் அடைந்தவர். சுகபோகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பவர். அவரெல்லாம் எங்களைப் பற்றி பேச எந்தவிதமான தகுதியும் இல்லாதவர். எனவே, இவர் இதுபோன்ற கருத்துகளை மீண்டும் கூறினால், அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+