பிச்சையா போடுறீங்க? புதிய பிரியாணி கடையை பார்த்ததுமே வேலூர் கலெக்டருக்கு வந்த கோபம்! சீல் வைப்பு
வேலூர்: வேலூரில் இன்று புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடை கொடுத்த அறிவிப்பால் ஏராளமான மக்கள் நீண்ட பிரியாணி வாங்க காத்திருந்தனர். இதனை பார்த்து கோபமடைந்த கலெக்டர், ‛பிச்சையா போடுறீங்க' எனக்கூறி, கூட்டத்தை கலைக்க கூறி கடைக்கு சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர் காட்பாடியில் உள்ள சித்தூர் பஸ் நிலையம் அருகே இன்று புதிதாக பிரியாணி கடை திறக்கப்பட்டது. திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டன. பிரியாணி கடையை வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ஆபர்கள் இருந்தன.

அதாவது திறப்பு விழாவையொட்டி கடையில் ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம். ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் இன்னொரு சிக்கன் பிரியாணி இலவசம் என விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து திட்டமிட்டப்படி பிரியாணி கடை இன்று திறக்கப்பட்டது.
இதையடுத்து கடையின் முன்பு ஏராளமான மக்கள் குவிந்தனர். எதிர்பார்த்ததை விட கூட்டம் அதிகளவில் கூடியது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் வரிசையாக நிற்கும்படி கேட்டு கொள்ளப்பட்டனர். அதைத்தொடர்ந்து பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் மக்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நிற்க தொடங்கினர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட துவங்கியது. இதுபற்றி அறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் மக்கள் நீண்ட வரிசையில் நின்றதை பார்த்து அவர் கோபமடைந்தார். இதையடுத்து அவர் பிரியாணி கடை மேனேஜரை அழைத்து கடிந்து கொண்டார்.
அப்போது, ‛‛ஏன் இப்படி வைத்துள்ளீர்கள். பிச்சை போடுறீங்களா?. கடையை மூடுங்க.. வாடிக்கையாளர்களை உட்கார வைக்க முடியாதா? உங்களை நம்பி எத்தனை பேர் வெயிலில் காத்து கிடக்கின்றனர்'' என கடிந்து கொண்டார். இதையடுத்து கூட்டத்தை கலைக்கும் வகையில் போலீசார் கடையை மூட முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் பிரியாணி தான் முக்கியம் என கடைக்குள் வேகவேகமாக நுழைந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பொதுமக்களை போலீசார் அப்புறப்படுத்திவிட்டு கடையை பூட்டினர். மேலும் சம்பவம் குறித்து மாநகராட்சி கமிஷனருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது அந்த கடை உரிமமின்றி திறக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதன்மூலம் திறப்பு விழா கண்ட நாளிலேயே பிரியாணி கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications