Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடியாத்தம் கிணற்றில் மிதந்த உருவம்.. அரை கிலோ மீட்டருக்கு எப்படி? வேலூர் குழந்தை வழக்கில் விசாரணை

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் மாயமான குழந்தை, பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணை உச்சக்கட்ட தீவிரம் பெற்றுள்ளது.. குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குழந்தை எப்படி கிணற்றுக்குள் விழுந்தது? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த தம்பதி தரணி - பிரியா.. இவர்களது 3 வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா கடந்த 28-ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயிருக்கிறாள்.. இதனால் பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், குடியாத்தம் தாலுகா போலீஸில் புகார் தந்தனர்.

vellore girl child well

திடீர் மாயம்: இதையடுத்து, காணாமல் போன குழந்தை ஜெயப்பிரியா வீட்டின் அருகேயிருந்த பாழடைந்த கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்..

தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. குழந்தை காணாமல் போனதாக புகார் வந்ததுமே, எஸ்.பி. மதிவாணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடும் நடவடிக்கை ஆரம்பமானது. ஆனால், 3 நாட்களாகவே தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.. இதற்காக மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டது. அப்போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

பாழடைந்த கிணறு: பிறகு தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியிலிருந்த கிணறுகளில் தேட துவங்கினார்கள்.. இதற்காக அந்த கிணறுகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றி, அவைகளிலும் குழந்தையை தேடும் பணி நடந்தது. அதற்கு பிறகே, குழந்தை மீட்கப்பட்டுள்ளது.. ஆனால் அந்த கிணறு, இன்னொருவருக்கு சொந்தமானது.

vellore girl child well

குழந்தை காணாமல்போன இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த கிணறு.. இதற்குள் எட்டிப்பார்த்தபோதுதான், பாழடைந்த கிணற்றில் குழந்தையின் சடலம் மிதந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையின் உடலை போர்வை மூலம் கட்டி, சடலத்தை மேலே கொண்டுவந்தனர். பிறக உடனடியாக தடய அறிவியல் துறையினர் குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர்..

சந்தேகம்: இரண்டரை வயது குழந்தை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு எப்படி நடந்து சென்றிருக்க முடியும்? குழந்தை மாயமான அன்று அமாவாசை ஆகும்.. அதனால், இருட்டில் குழந்தையை யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்க துவங்கியிருக்கிறது.. எனவே இந்த சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+