குடியாத்தம் கிணற்றில் மிதந்த உருவம்.. அரை கிலோ மீட்டருக்கு எப்படி? வேலூர் குழந்தை வழக்கில் விசாரணை
வேலூர்: வேலூரில் மாயமான குழந்தை, பாழடைந்த கிணற்றில் மீட்கப்பட்ட நிலையில், போலீசாரின் விசாரணை உச்சக்கட்ட தீவிரம் பெற்றுள்ளது.. குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குழந்தை எப்படி கிணற்றுக்குள் விழுந்தது? என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த தம்பதி தரணி - பிரியா.. இவர்களது 3 வயது பெண் குழந்தை ஜெயப்பிரியா கடந்த 28-ம் தேதி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயிருக்கிறாள்.. இதனால் பதறிப்போன பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், குடியாத்தம் தாலுகா போலீஸில் புகார் தந்தனர்.

திடீர் மாயம்: இதையடுத்து, காணாமல் போன குழந்தை ஜெயப்பிரியா வீட்டின் அருகேயிருந்த பாழடைந்த கிணற்றில் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர்.. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியோடு குழந்தையின் உடலை மீட்டனர். குழந்தையின் சடலத்தை போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்..
தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. குழந்தை காணாமல் போனதாக புகார் வந்ததுமே, எஸ்.பி. மதிவாணன் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடும் நடவடிக்கை ஆரம்பமானது. ஆனால், 3 நாட்களாகவே தேடியும் குழந்தை கிடைக்கவில்லை.. இதற்காக மோப்ப நாய் சாரா வரவழைக்கப்பட்டது. அப்போதும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
பாழடைந்த கிணறு: பிறகு தீயணைப்புத் துறையினரும் வரவழைக்கப்பட்டு அந்த பகுதியிலிருந்த கிணறுகளில் தேட துவங்கினார்கள்.. இதற்காக அந்த கிணறுகளிலிருந்து தண்ணீரை வெளியேற்றி, அவைகளிலும் குழந்தையை தேடும் பணி நடந்தது. அதற்கு பிறகே, குழந்தை மீட்கப்பட்டுள்ளது.. ஆனால் அந்த கிணறு, இன்னொருவருக்கு சொந்தமானது.

குழந்தை காணாமல்போன இடத்தில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது இந்த கிணறு.. இதற்குள் எட்டிப்பார்த்தபோதுதான், பாழடைந்த கிணற்றில் குழந்தையின் சடலம் மிதந்துகொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையின் உடலை போர்வை மூலம் கட்டி, சடலத்தை மேலே கொண்டுவந்தனர். பிறக உடனடியாக தடய அறிவியல் துறையினர் குழந்தையின் உடலை ஆய்வு செய்தனர்..
சந்தேகம்: இரண்டரை வயது குழந்தை அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு எப்படி நடந்து சென்றிருக்க முடியும்? குழந்தை மாயமான அன்று அமாவாசை ஆகும்.. அதனால், இருட்டில் குழந்தையை யாரேனும் கடத்தி சென்றிருக்கலாம் என்கிற சந்தேகம் வலுக்க துவங்கியிருக்கிறது.. எனவே இந்த சம்பவத்தில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்களும் வெளியாகலாம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications