வேலூரில் 1.63 லட்சம் கடன் வாங்கிய வங்கியிடமே.. 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வாங்க போகும் விவசாயி.. செம்ம
வேலூர் : வங்கியில் கடனை கட்டி முடித்த பின்னரும் நில ஆவணங்களை திருப்பி வழங்காததால் விவசாயிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு வேலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வங்கியில் சொத்து பத்திரம் அல்லது நிலப்பத்திரங்களை வைத்து கடன் வாங்கியிருந்தால் இந்த செய்தியை முழுமையாக பாருங்கள். நிலம் அல்லது வீடு ஆகியவற்றை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கியவர்கள் முறையாக கடனை திருப்பி செலுத்தினால் பத்திரத்தை திரும்ப பெறலாம்.

பெரும்பாலும் இதில் எந்த சிக்கலும் இருக்காது. அதேநேரம் சில வங்கிகள் ஏதாவது ஒரு காரணத்தை கூறி நில ஆவணங்கள் அல்லது வீட்டு பத்திரத்தை திரும்ப தராமல் உங்களை அலைகழித்தால் நீங்கள் வங்கி நிர்வாகத்திடம் முறையிடுங்கள். ஒருவேளை உங்களுக்கு தீர்வு கிடைக்காமல் போனால் நீங்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்.
கோர்டில் உங்களுக்கு நிச்சயம் சரியான நீதி கிடைக்கும். வங்கிகள் தவறு செய்திருந்தாலோ அல்லது அவர்களின் சேவை குறைபாட்டால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் வழக்கு போட்டு இழப்பீடு பெற முடியும். அப்படி இழப்பீடு பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்ட விவசாயி ஒருவர். வேலூரில் நடந்த வழக்கு பற்றி பார்ப்போம்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அதிமஞ்சேரிபேட்டையை சேர்ந்தவர் நீலகண்டசெட்டி என்பவர் விவசாயி ஆவார். இவர் விவசாயம் செய்வதற்கு போதிய பணம் இல்லாததால் 1992-ம் அண்டு வங்கியில் கடன் பெற முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி நீலகண்டசெட்டி தன் ஏரியாவிலேயே அமைந்துள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று ரூ.1 லட்சத்து 63 ஆயிரம் வேளாண் கடன் பெற்றார். இந்த கடன் பெறுவதற்காக அவர் நில ஆவணங்கள் உள்ளிட்ட பல ஆவணங்களை வங்கியில் சமர்ப்பித்திருக்கிறார். கடந்த 2006-ம் ஆண்டு அவர் சரியாக அசல் மற்றும் வட்டியை செலுத்தி தனது வங்கிக்கடனை கட்டி முடித்தார்.
இதையடுத்து நீலகண்டசெட்டி வங்கியில் நில ஆவணங்களை திரும்ப ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறார். ஆனால் வங்கி நிர்வாகம் அவரது ஆவணங்களை திரும்ப வழங்காமல் தாமதப்படுத்தி வந்திருக்கிறது. இதனால் அவர் வங்கியின் சென்னை மண்டல மேலாளருக்கு கடிதம் மூலம் புகார் செய்திருக்கிறார். எனினும் அவரது ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லை.
இதன் பின்னர் அவர் சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணை வேலூர் கோர்ட்டுக்கு மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆ.மீனாட்சி சுந்தரம் அண்மையில் தீர்ப்பு வழங்கினார்.
அதில் நில ஆவணங்களை ஒப்படைக்காமல் தாமப்படுத்தியதால் வங்கியின் சேவை குறைபாடுக்காக ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி நீலகண்டசெட்டிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக கிளை மேலாளர், மண்டல மேலாளர், வங்கியின் மும்பை நகர இயக்குனர் ஆகியோர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். வங்கியில் கடனை கட்டி முடித்த பின்னரும் நில ஆவணங்களை திருப்பி வழங்காததால் விவசாயிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications