Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேலூரில் பார்த்தீங்களா.. 5வது மனைவியின் ஆவேசம்.. ஓயாத உல்லாச அழைப்பு..துயரத்தில் சிக்கிய பரிதாப பெண்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: இளம்பெண் ஒருவர் கண்ணீருடன் வேலூர் போலீசில் புகார் தந்துள்ளார்.. அது தொடர்பான விசாரணையை போலீசார் கையில் எடுத்து வருகிறார்கள்.

வேலூர் எஸ்பி அலுவலகத்தில், மக்கள் குறைதீர்வு கூட்டம், வழக்கம்போல நேற்று நடைபெற்று கொண்டிருந்தது.. அப்போது, சைபர் கிரைம் பிரிவு ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்..

Vellore incident and Why did young 5th wife complaint against her Andhra pradesh husband

இளம்பெண்: இதில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. அப்போது, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் புகார் தந்தார். அவருக்கு 38 வயதாகிறது. அந்த புகாரில் உள்ளதாவது:

"எனக்கு, சென்னையை சேர்ந்தவருடன் 15 வருடங்களுக்கு முன்பு கல்யாணமானது.. 14 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.. என்னுடைய கணவர் 3 வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டார். எனக்கு சிறிய வயது என்பதால், என்னுடைய அம்மா வீட்டில் இன்னொரு கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதில், மேட்ரிமோனி மூலம் திருப்பதியை சேர்ந்த வினோத்குமார் என்பவர் அறிமுகமானார்.

பேங்க் மேனேஜர்: அவர் வேலூரில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக இருப்பதாக சொன்னார். அவருடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் திருமணம் நடந்தது. பிறகு, அரியூரில் வசித்து வந்தோம்.

திருமணத்திற்கு பிறகு செலவுக்காக என்னிடம் ரூ.65 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை பெற்றுக்கொண்டார். இதுகுறித்து கேட்டால் சரிவர பதில் சொல்லவில்லை. சமீபத்தில்தான், என்னுடைய கணவருக்கு ஏற்கனவே 4 பெண்களுடன் கல்யாணம் நடந்திருப்பது தெரிந்து நானும், எனது மகளும் அதிர்ச்சியடைந்தோம். இதுகுறித்து கேட்டபோது, எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

இதுதொடர்பாக வேலூர் மகளிர் போலீசில் புகார் அளித்தேன்.. அதுகுறித்த விசாரணையில், எனது கணவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

ஆபாச அழைப்புகள்: போலீசில் நான் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று என்னுடைய கணவர் மிரட்டி வருகிறார். ஆனாலும் வாபஸ் பெற மறுத்ததால், ஃபேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் என்னுடைய போட்டோக்களையும், என்னுடைய செல்போன் நம்பரையும் பதிவிட்டு வருகிறார்.

அத்துடன், என்னுடைய நடத்தையையும் இழிவுபடுத்தி பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்ததும் பலர் என்னிடம் ஆபாசமாக பேசியும், உல்லாசமாக இருக்கவும் அழைக்கின்றனர். இதனால் நானும், மகளும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். எனக்கும் எனது மகளுக்கும் பாதுகாப்பு அளிக்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

மனுக்கள்: இந்த மனுவை பெற்றுக்கொண்ட ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், சமூக வலைதங்களில் பதிவு செய்யப்பட்ட அப்பெண்ணின் போட்டோ, செல்போன் நம்பரை உடனடியாக நீக்கவும், மேலும் மோசடியாக திருமணம் செய்தவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் போலீசாருக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இதுதொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+