வேலூரில் போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு பணம் ரூ.4 லட்சம் அரசு கணக்கில் சேரலயா! கலெக்டர் ஆபிஸில் யாரிந்த பெண்
வேலூர்: மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், அப்பாவி மக்களின் சேமிப்பு பணம் இவ்வாறு கையாடல் செய்யப்பட்டிருப்பதாக பெண் ஒருவர் சொன்ன புகார், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இதுகுறித்து இதுவரை உரிய விசாரணை நடத்தப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி வருகிறது.. என்ன நடந்தது வேலூரில்?
இந்திய தபால் துறையின் சேமிப்புத் திட்டங்கள் பல வருடங்களாகவே நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் நிதிப் பாதுகாப்பிற்கு பெரும் அரணாக திகழ்ந்து வருகின்றன..

குறிப்பாக வங்கி சேவைகள் எட்டாத தொலைதூரக் கிராமங்களிலும் தபால் நிலையங்கள் செயல்படுவதால் சாதாரண மக்களும் தங்கள் சிறு சேமிப்பை முதலீடு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.. அரசின் நேரடி கண்காணிப்பில் இருப்பதால் இந்த திட்டங்களில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு முழுமையான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது..
தபால் துறையின் சேமிப்புத் திட்டம்
வட்டி விகிதங்கள் மற்ற நிதி நிறுவனங்களை காட்டிலும் நிலையானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருப்பதே இதன் தனிச்சிறப்பாகும்.. இத்தகைய நம்பிக்கைக்குரிய ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், சாமானிய மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிபோகும் அவலம் தற்போது அரங்கேறியுள்ளது..
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்றைய தினம், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது..
வேலூர் காட்பாடி
டிஆர்ஓ சிவசுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நல அலுவலர் மதுசெழியன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தனர்.. அப்போது காட்பாடி அடுத்த ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் மனு அளிக்க வந்திருந்தார்.. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், திடீரென அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய்யைத் தன் மீது ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த போலீசாரும் பொதுமக்களும் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி மீட்டனர்.. இந்த சம்பவத்தால் அந்த இடமே ஒரு நிமிடம் பெரும் பதற்றத்திற்கும் பரபரப்பிற்கும் உள்ளானது..
தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆட்சியர் சுப்புலட்சுமி, அந்த பெண்ணிடம் விவரங்களை கேட்டு அறிந்து அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்..
அரசு கணக்கு கையாடல்
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் அளித்த புகாரில் ஜாப்ராபேட்டை கிளை தபால் நிலையத்தில் தான் சேமித்து வைத்திருந்த சுமார் 4 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.. தபால் நிலைய ஊழியர் அந்தப் பணத்தை அரசு கணக்கில் செலுத்தாமல் கையாடல் செய்துள்ளதாகவும், தன்னைப்போலவே சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு பணத்தை இழந்து தவித்து வருவதாகவும் அவர் குமுறலாக தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக ஏற்கனவே காவல் துறையிடமும் ஆட்சியர் அலுவலகத்திலும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் விரக்தியின் எல்லைக்கே சென்று இத்தகைய விபரீத முடிவை எடுத்ததாக அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை நிறுவனம்
மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரு பொதுத்துறை நிறுவனத்தில், அப்பாவி மக்களின் சேமிப்புப் பணம் இவ்வாறு கையாடல் செய்யப்பட்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.. மக்களின் வாழ்நாள் சேமிப்பு பறிபோனது குறித்து இதுவரை உரிய விசாரணை நடத்தப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.. மாவட்ட தலைநகரின் முக்கியப் பகுதியான ஆட்சியர் அலுவலகத்திலேயே பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற இந்தச் சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, தபால் நிலையச் சேமிப்பின் பாதுகாப்பு குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications