வேலூரில் தாலுகா ஆபீசுக்கு அவசர அவசரமாக வந்த சோனியா.. நிலம் பட்டா இருக்கா இல்லயா? பரபரத்த குடியாத்தம்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: மாதம் 50,000 வீதம் வரும் டிசம்பருக்குள் பட்டா வழங்கப்பட வேண்டும், 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில், வேலூர் மாவட்டத்தில் இளம்பெண் எடுத்த முடிவு, பரபரப்பை தந்து வருகிறது.

தமிழ்நாட்டில் நில வரன்முறை நடவடிக்கைகள் அடிப்படையில் பட்டா வழங்கப்படுகின்றன.. பல்வேறு பிரிவுகளின்கீழ் இந்த வருடத்துக்குள் 5 லட்சம் பட்டா வழங்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது..

Vellore Patta Taluk office

அந்த வகையில், 6.29 லட்சம் பட்டாக்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 3.55 லட்சம் பட்டா ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டன. மிச்சமுள்ள பட்டாவை மாதம் 50,000 வீதம் டிசம்பருக்குள் வழங்க வேண்டும் என்றும், வருடத்துக்கு 1.11 கோடி பட்டாக்களில் பெயர் மாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிவக்குமார் தம்பதி

இந்நிலையில், இளம்பெண் ஒருவர் தனக்கு பட்டா கிடைக்காததால், தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளார்.. குடியாத்தம் அடுத்துள்ளது வளத்தூர்.. இங்கு வசித்து வரும் தம்பதி சிவகுமார் - சோனியா. இதில் சோனியாவுக்கு 28 வயதாகிறது.. வளத்தூர் கிராமம் ஆதி திராவிட சமூக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வீட்டு மனை இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் உள்ளதால், இங்கேயே கடந்த சில வருடங்களாக சோனியா குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கி வருகிறார்.

தாங்கள் தங்கியிருக்கும் இந்த இடத்திற்கு அரசின் அரசு பட்டா வழங்க வேண்டும் என்று சோனியா கேட்டு வருகிறார்.. இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு முறை, பல மாதங்களாகவே மனு அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த இடத்துக்கு முறையான பட்டா வழங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு சேலை

இதனால் விரக்தியும் வேதனையும் அடைந்த சோனியா, நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலக வளாகத்தில் பட்டா வழங்கக்கோரி, மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாலுகா அலுவலகத்தில் இருந்த ஊழியர்கள், விரைந்து சோனியாவை மீட்டு, மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி எறிந்தனர்.. சோனியா மீது தண்ணீரை காப்பாற்றி, அவரை அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று, அங்கிருந்த தமிழக அரசின் இலவச சேலையை தந்து உடையை மாற்றி, பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்..

சமாதான பேச்சுவார்த்தை

இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் டவுன் போலீசாரும், ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் மெர்லின் ஜோதிகா ஆகியோர் சோனியாவை அழைத்து சமாதானம் பேசினார்கள்.. சோனியா குடிசை போட்டு தங்கியிருக்கும் அந்த இடத்துக்கு முறைப்படி பட்டா கிடைக்காது என்கிறார்கள். ஆனால், குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இது தொடர்பாக அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள்? என்ற எதிர்பார்ப்பு குடியாத்தத்தில் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+