வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்.. பொள்ளாச்சி ஜெயராமன்
வேலூர்: மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
அதிமுக வெற்றி கூட்டணியின் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளரும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் ஏ.சி.சண்முகம் என குறிப்பிட்டார்.

ஏற்கனவே சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியுள்ளார். மேலும் வேலூர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
எனவே ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அமோக வெற்றி பெறுவார் என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.
ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எளிமையான முறையில் மக்களை சென்று சந்தித்து ஆதரவு கேட்டு வருவதாக குறிப்பிட்டார். மக்களும் எங்களை புன்முறுவலோடு வரவேற்று வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.
எனவே நிச்சயமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் உறுதியாக வெற்றி பெறுவார். மேலும் ஜெயலலிதா மறைந்தது முதலே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே சொந்த கட்சியினரை திமுக உற்சாகப்படுத்தி வருகிறது, அது அவர்களின் தலையெழுத்து.
திமுக-விற்கு இதை விட்டால் தற்போது வேறு வழியில்லை, 2021 சட்டமன்ற தேர்தல் வரை திமுக ஆட்சி மாற்றம் என்ற வாக்கியத்தை வைத்தே காலத்தை ஓட்டி விடும்.
மேலும் திமுக என்பது வாரிசு கட்சி என்பதை மக்களுக்கு தெளிவாக நிரூபித்து விட்டனர். எனவே தமிழகத்தில் இனி அக்கட்சி ஆட்சிக்கு வராது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக-விற்கு பெருவாரியான ஆதரவு உள்ளது. எனவே நிச்சயம் வேலூர் எங்களது வெற்றி கோட்டையாக மாறும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications