வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வார்.. பொள்ளாச்சி ஜெயராமன்
வேலூர்: மக்களவை தொகுதி தேர்தலில் அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள வேட்பாளர் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என, சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
அதிமுக வெற்றி கூட்டணியின் வேலூர் மக்களவை தொகுதி வேட்பாளரும், புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களால் நாட்டிற்கு அடையாளம் காட்டப்பட்டவர் ஏ.சி.சண்முகம் என குறிப்பிட்டார்.

ஏற்கனவே சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றியுள்ளார். மேலும் வேலூர் தொகுதி மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்.
எனவே ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அமோக வெற்றி பெறுவார் என்றார் பொள்ளாச்சி ஜெயராமன்.
ஏ.சி.சண்முகத்தின் வெற்றிக்காக அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் எளிமையான முறையில் மக்களை சென்று சந்தித்து ஆதரவு கேட்டு வருவதாக குறிப்பிட்டார். மக்களும் எங்களை புன்முறுவலோடு வரவேற்று வாக்களிப்பதாக கூறியுள்ளனர்.
எனவே நிச்சயமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் உறுதியாக வெற்றி பெறுவார். மேலும் ஜெயலலிதா மறைந்தது முதலே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே சொந்த கட்சியினரை திமுக உற்சாகப்படுத்தி வருகிறது, அது அவர்களின் தலையெழுத்து.
திமுக-விற்கு இதை விட்டால் தற்போது வேறு வழியில்லை, 2021 சட்டமன்ற தேர்தல் வரை திமுக ஆட்சி மாற்றம் என்ற வாக்கியத்தை வைத்தே காலத்தை ஓட்டி விடும்.
மேலும் திமுக என்பது வாரிசு கட்சி என்பதை மக்களுக்கு தெளிவாக நிரூபித்து விட்டனர். எனவே தமிழகத்தில் இனி அக்கட்சி ஆட்சிக்கு வராது என பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்
வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக-விற்கு பெருவாரியான ஆதரவு உள்ளது. எனவே நிச்சயம் வேலூர் எங்களது வெற்றி கோட்டையாக மாறும் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications