வேலூர் பக்கமே செல்லவில்லையே.. கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை.. கதிர் ஆனந்த் அளித்த பதில்!
வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக எம்பி கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

வேலூர்: வேலூர் லோக்சபா தேர்தலில் திமுக சார்பாக எம்பி கனிமொழி ஏன் பிரச்சாரம் செய்யவில்லை என்று திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.
நாளை வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது. புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அதிமுக கூட்டணி சார்பில் இங்கு போட்டியிடுகிறார். திமுக சார்பில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் வேலூரில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தனர். அதேபோல் திமுக சார்பாக உதயநிதி ஸ்டாலினும் பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில் நேற்றோடு பிரச்சாரம் முடிந்தது. ஆனால் இந்த பிரச்சாரம் முழுக்க திமுக சார்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினரும், எம்பியுமான கனிமொழி பிரச்சாரம் செய்யவே இல்லை. வேலூர் தொகுதி பக்கமே அவர் செல்லவில்லை.
இதனால் திமுகவில் கனிமொழி புறக்கணிக்கப்படுகிறாரா என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர். இது ஏன் என்று தற்போது வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பேட்டி அளித்துள்ளார்.
அதில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருப்பதால் கனிமொழியால் பரப்புரைக்கு வரமுடியவில்லை. பரப்புரையில் பங்கேற்காவிடினும் அன்றாட நிகழ்வுகளை தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்வார்.
நாடளுமன்றத்தில் நிறைய பணிகள் இருக்கிறது. தினமும் அங்கு நிறைய மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. இதனால் கனிமொழியால் தமிழகத்திற்கு வந்து செல்ல முடியவில்லை. இதற்கு பின் வேறு எந்த விதமான காரணமும் இல்லை என்று, கதிர் ஆனந்த் விளக்கி உள்ளார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications