யாருக்கும் அஞ்சாதவர், அவர் பொய் சொன்னதாக நான் கேள்விபட்டதில்லை.. சோ குறித்து ரஜினி உருக்கம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் நடிகரும் நாடக ஆசிரியருமான சோ ராமசாமி(82) இன்று அதிகாலையில் மாரடைப்பால் காலமானார். எம்.ஆர்.சி நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சோவின் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், சோவின் நெருங்கிய நண்பரான நடிகர் ரஜினிகாந்த் இன்று அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ரஜினி, "சோ பத்திரிகை உலகின் ஜாம்பவான். சோ எனது மிகச் சிறந்த நண்பர்.. தனது கருத்துகளைச் சொல்வதில் யாருக்கும் அஞ்சாதவர். அவர் பொய் பேசியதாக இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை. அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். சோவின் ஆத்மா சாந்தியடைய ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்," என்றார்.












Click it and Unblock the Notifications