மழை சோறு... பிரசாதம் வாங்க வந்த பெண்களுக்கு செருப்படி.. ஈரோட்டில் நடந்த வினோத திருவிழா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே ஆயிபாளையத்தில் மழை வேண்டி கிராம மக்கள் வினோத வழிபாடு நடத்தினர். அதன்படி வீடுகளில் இருந்து பழைய சோறை கோவிலுக்கு கொண்டு சென்று, பூஜைகள் செய்து பிரசாதமாக பெண்கள் வாங்கிச் சென்றனர். அவ்வாறு பிரசாதம் வாங்க வரும் பெண்களை, பெண்களே விளக்குமாறு, செருப்பு போன்றவற்றால் அடித்தும் விரட்டினர். இவ்வாறு செய்வதால் பெண்கள் கோபித்துக் கொண்டு ஊரை விட்டு வெளியேறுவது போன்றும், பின்னர் அவர்களை சமாதானம் செய்து அழைத்து வருவது போன்றும் ஊர்மக்கள் நடித்தனர். இந்தத் திருவிழாவை மழை சோறு என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது அவர்களது நம்பிக்கை.
வீடியோ:












Click it and Unblock the Notifications