தொடரும் ஒரு தலைக்காதல் கொலைகள்... கரூரில் மாணவியை கட்டையால் அடித்துக் கொன்ற சீனியர் மாணவர்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூரில் ஒரு தலைக்காதலால் கல்லூரி மாணவி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் பெயர் சோனாலி. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த சோனாலியை, அதே கல்லூரியைச் சேர்ந்த உதயகுமார் என்ற மாணவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலை ஏற்க சோனாலி மறுத்ததால், ஆத்திரமடைந்த உதயகுமார் மற்ற மாணவர்கள் முன்னிலையில் வகுப்பறைக்குள் புகுந்து கட்டையால் சோனாலியை பலமாகத் தாக்கி விட்டு தப்பி விட்டார். இதில் பலத்த காயமடைந்த சோனாலி, சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
வீடியோ:












Click it and Unblock the Notifications