For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ

Google Oneindia Tamil News

திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்கு கும்பல் ஒன்று செம்மரக்கட்டைகளைக் கடத்துவது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடத்தல் கும்பலைச் சரணடையும்படி எச்சரித்த போலீசார், வானத்தை நோக்கிச் சுட்டனர். ஆனால், போலீசார் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய அக்கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றது. இதையடுத்து அவர்களைத் துரத்திச் சென்ற போலீசார், மூன்று பேரைக் கைது செய்தனர். அவர்கள் மூவரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து ரூ 30 லட்சம் மதிப்புள்ள 14 செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

English summary
In Tirupati, three tamil workers were arrested for red sandalwood smuggling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X