போலீசை தாக்கி தப்பிய கடத்தல்காரர்கள்.. ரூ. 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி நரசிங்கபுரம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் ரோந்து மேற்கொண்டனர். அப்போது சிலர் செம்மரக்கட்டைகளை வெட்டிக் கடத்திச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அவர்களை சுற்றி வளைக்க போலீசார் முயற்சி செய்தனர். ஆனால், தங்களிடம் இருந்த செம்மரக்கட்டைகளை அப்படியே போட்டிவிட்டு, போலீசார் மீது கல்வீசி கடத்தல்காரர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பினர். இதனால் போலீசாரால் அவர்களைக் கைது செய்ய இயலவில்லை. பின்னர், அங்கிருந்த செம்மரக்கட்டைகளை மட்டும் சேகரித்து கொண்டு சென்றனர். அவைகளின் மதிப்பு ரூ. ஒரு கோடியே 40 லட்சம் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications