ரூ. 7 கோடி பில் கட்டாத திருப்பூர் மாநகராட்சி... மின் இணைப்பை துண்டித்த மின்வாரியம் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, ஆகஸ்ட் வரை, ஏழு கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், அதை செலுத்தாமல், மாதக்கணக்கில் இழுத்தடித்து வந்தது. இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தாத அரசு கட்டடங்களில், மின் இணைப்பை துண்டிக்க, மின்வாரிய உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஒரே நேரத்தில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்த மின் வாரிய அதிகாரிகள், கரண்ட் கனெக்சனை கட் செய்தனர். மாநகராட்சி மைய அலுவலகம் மட்டுமின்றி, நான்கு மண்டல அலுவலகங்களிலும், ஒரே நேரத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications