ஸ்பீக்கர் பாக்ஸில் 2 வயது சிறுவனின் சடலம்! விபரீதமாக மாறிய விளையாட்டு.. கலங்கிய கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி: விளையாடிக்கொண்டிருந்த சிறுவனை காணவில்லை என்று பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், 3 நாட்கள் கழித்து வீட்டில் உள்ள ஸ்பீக்கர் பாக்ஸில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலப்பந்தலில் இந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது. திருப்பாலப்பந்தல் கிராமத்தின் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் திருமூர்த்தி. கூலி தொழிலாளியான இவருக்கு ஒரு சில வருடங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடைபெற்றிருக்கிறது. இதனையடுத்து கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. செய்வது கூலி வேலையாக இருந்தாலும், குழந்தை, மனைவி, குடும்பம் என திருமூர்த்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதியன்று இவரது மகன் 2 சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அதன் பின்னர் சிறுவனை காணவில்லை. அக்கம் பக்கம் வீடுகளில் தேடி பார்த்தும் சிறுவனை கண்டுபிடிக்கமுடியவில்லை. இதனால் பதறிய திருமூர்த்தி உடனடியாக திருப்பாலப்பந்தல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினரும் அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர். ஆனாலும் சிறுவன் குறித்த எந்த தகவலும் தெரியவில்லை.
இதனையடுத்து திருப்பாலப்பந்தல் அருகே உள்ள மற்ற காவல் நிலையங்களுக்கும் சிறுவனின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது. கடந்த 3 நாட்களாக சிறுவன் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், திருமூர்த்தியின் வீட்டிலிருந்த ஸ்பீக்கர் பாக்கஸில் துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகத்தின் பேரி அதனை திறந்து பார்த்த திருமூர்த்தி கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். அதாவது காணாமல் போன சிறுவன் இந்த ஸ்பீக்கர் பாக்ஸில் சடமலாக அழுகிய நிலையில் இருந்திருக்கிறார்.
இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறுவனின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல சிறுவன் எப்படி இந்த பாக்ஸில் சிக்கினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடும்போது எதிர்பாராத விதமாக இங்கு சிக்கிக்கொண்டாரா? அல்லது வேறு யாராவது இதில் அடைத்து வைத்தார்களா? திட்டமிட்ட கொலையா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் சிறுவனின் சித்தாப்பாவை பிடித்து காவல்துறை விசாரித்து வருகிறது. காணாமல் போன சிறுவன் 3 நாட்கள் கழித்து சிறுவன் வீட்டில் உள்ள ஸ்பீக்கர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications