ரயில் தண்டவாளம் மாதிரி... ஈகோ வேணாமே! முதலமைச்சர் மற்றும் ஆளுநருக்கு அன்புமணி அட்வைஸ்
விழுப்புரம்: தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது எனவும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
Recommended Video
விழுப்புரத்தில் பாமக மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தமிழக ஆளுநரும், தமிழக அரசும் ரயில் தண்டவாளங்களை போல இணைந்து செயல்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் ஈகோ பார்க்கக் கூடாது.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டை சரி செய்வதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக, ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால், கல்லூரியில் ராக்கிங் செய்யப்பட்ட காரணத்தினால்தான் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகிறது.
எனவே, ராக்கிங் செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத்தை அரசு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தமிழகத்தில் காவல் நிலையங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, முறையாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும்,
நாளுக்கு நாள் உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கேஸ் விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications