’பிரியா ஸ்வீட்டி’ சிக்கியாச்சு.. வீடியோ காலுக்கு 1500..ரூமுக்கு 3000! கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்
விழுப்புரம்: இன்ஸ்டாகிராம் பேஸ்புக்கில் கிடைக்கும் இளம்பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்தி போலி கணக்குகளை உருவாக்கி இரண்டு ஆண்டுகளாக ஆண்களிடம் பணம் பறித்து வந்த மரக்காணத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். வாய்ஸ் சேஞ்சர் என்ற செயலி மூலம் பெண்கள் போல பேசியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளில் வாழ்க்கைத் துணையைத் தேடி வாழ்க்கையையே தொலைத்தவர்கள் ஏராளம் இருக்க, தற்போது டின்டர், அன்பே உள்ளிட்ட டேட்டிங் செயலிகளும் இருக்கிறது.

இதுமட்டுமின்றி ஓரினச்சேர்க்கைக்கு கூட செயலிகள் இருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து மோசடி கும்பலும் தங்களது கைவரிசைகளை மற்றொருபுறம் அரங்கேற்றி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் செல்போன் ஆப் மூலம் இளைஞர்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைக்கும் கும்பல் அவர்களிடம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது கூட அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் சபல ஆண்களை குறிவைத்து பெண்கள் போல பேசி பணத்தை ஆட்டைய போட்டு வந்த மரக்காணம் கிருஷ்ணனை கைது செய்துள்ளனர் சைபர் கிரைம் போலீசார். வாய்ஸ் சேஞ்சர் ஆப் மூலம் மெசஞ்சரில் பேசி பல லட்சம் ரூபாயை அவர் சுருட்டியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக அரைகுறை ஆடைகளுடன் ரிலீஸ் போடும் பெண்களின் புகைப்படங்களை எடுத்து அதனை வைத்து அவர் பணம் சம்பாதித்து வந்துள்ளார். சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் தன்னுடைய புகைப்படத்தை பாலியல் தொழில் செய்யும் பெண் என சமூக வலைதளக்கணக்கை உருவாக்கி சில ஆண்களிடம் அதனை அனுப்பி பணம் பறிக்கும் சம்பவம் நடைபெறுவதாகவும், தனக்கு தெரிந்த சிலர் இதுகுறித்து தன்னிடம் தெரிவித்த நிலையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் தனது மற்றொரு நண்பர் மூலம் அந்த குறிப்பிட்ட சமூக வலைதளக் கணத்தை தொடர்பு கொண்டு பேசிய போது ஆபாச புகைப்படம் அனுப்ப ஐநூறு ரூபாய், வீடியோ காலில் பேச 1500 ரூபாய், அறை எடுத்து தங்க 3000 ரூபாய் செலுத்தினால் சந்திக்கலாம் எனவும், இதற்காக ஜிபே எண் மற்றும் கியூஆர் கோடை மெசஞ்சர் மூலம் அனுப்பியதாக தெரிவித்தார். மேலும் வாய்ஸ் சேஞ்சர் என்ற அப்ளிகேஷன் மூலம் பேஸ்புக் மெசஞ்சரில் பெண் குரலில் பேசியதாகவும், அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை அடுத்து பேஸ்புக் கணக்கில் ஜிமெயில் முகவரி மற்றும் ஜிபே கியூஆர் கோட் பயன்படுத்தி பணம் பெறப்பட்ட வங்கிக் கணக்கின் செல்போன் என்னை போலீசார் கண்டுபிடித்தனர். இது தொடர்பாக விசாரித்த போது விழுப்புரம் மரக்காணம் பகுதியில் செல்போன் கடை நடத்தி வரும் கிருஷ்ணன் சிக்கினார். விசாரணையில் பள்ளிக் கூடம் கூட முழுவதாக செல்லாத கிருஷ்ணன் ஹைதராபாத்தில் வேலை செய்து இருக்கிறார்.

தொடர்ந்து புதுச்சேரியில் நகைக்கடையில் பணியாற்றிய அவர் பணம் சம்பாதிப்பதற்காக போலீ பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி ஆண்களிடம் பணம் பறித்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து சபலத்தில் தொடர்பு கொள்ளும் ஆண்களிடம் பணத்தைப் பெற்று விட்டு அவர்களது நம்பர்களை பிளாக் செய்து விட்டு அடுத்த ஆண்களை ஏமாற்ற புறப்பட்டு விடுவானாம்.
இப்படியாக கடந்த சில நாட்களில் மட்டும் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது. பகலில் தங்க நகை கடை விற்பனை பிரதிநிதியாகவும் இரவில் பெண் போல பேசி பணம் சம்பாதித்ததாக போலீசாரின் விசாரணையில் கூறியுள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் கவர்ச்சி காட்டி வீடியோ போடும் பெண்களின் வீடியோக்களை எடுத்து கிருஷ்ணன் மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications