அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தோற்பது உறுதி... சொல்வது வேறுயாருமல்ல... அதிமுக MLA ராஜவர்மன் தான்..!
விருதுநகர்: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் பேசியிருக்கிறார்.
மேலும், மீடியாக்களில் கண்டதை பேசி அதிமுகவை குட்டிச்சுவராக்கி வருவதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சீறியுள்ளார் எம்.எல்.ஏ. ராஜவர்மன்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே அமைச்சருக்கு எதிராக இப்படி கொந்தளித்து பேசியிருப்பது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் கலகம்
விருதுநகர் மாவட்ட அதிமுகவில் கலகம் வெடித்திருக்கிறது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தனக்கு பிடிக்காதவர்களை ஓய்ப்பதற்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி என்ன வேண்டுமானாலும் செய்வார் என சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தெரிவித்துள்ளார். அவர் கூடவே இருந்ததால் அவரைப் பற்றிய அனைத்து விவகாரங்களும் தனக்கு அத்துப்படியாக தெரியும் எனக் கூறியிருக்கிறார்.

எம்.எல்.ஏ. சத்தியம்
திருச்செந்தூர் முருகன் மீது சத்தியமாக தாம் சொல்வது உண்மை என்றும் மாலை போட்டுக்கொண்டு பொய் பேசவேண்டிய அவசியம் தனக்கு இல்லை எனவும் கூறியிருக்கிறார். விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவை அழித்து வருவதாகவும் பேட்டிகொடுத்தே கட்சியை ஓய்த்து வருவதாகவும் ராஜேந்திரபாலாஜி பற்றி விமர்சித்துள்ளார்.

பொய் வாக்குறுதி
மேலும், பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் நீ தான் ஒன்றியச் செயலாளர் எனக் கூறி ஆசையை உருவாக்கி தன் பின்னால் கார்களை எடுத்துக்கொண்டு அமைச்சர் அலையவிடுவார் என்றும் ராஜேந்திரபாலாஜி செய்யும் அட்டூழியங்கள் அனைத்தும் முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தெரியும் என்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக முதல்வர் பொறுமை காத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்ப்பு
அமைச்சரை எதிர்க்கத் தான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தன்னை இறக்கிவிட்டார்கள் என்றும் தாம் எதிர்க்கவில்லை என்றால் ராஜேந்திரபாலாஜியின் வீராப்புக்கு அளவே இல்லாமல் போயிருக்கும் எனவும் கூறியுள்ளார். தாம் விருதுநகர் மாவட்டத்தில் எதிர்ப்பதால் தான் வேறுவழியின்றி இ.பி.எஸ். அண்ணன் காலில் அமைச்சர் விழுவதாக சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் தெரிவித்திருக்கிறார்.

பரபரப்பு புகார்
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத நிலையில் அமைச்சர் மீது ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரே இத்தகைய பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருப்பது அதிமுகவில் அதிகரித்து வரும் உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications