Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவால் தொடக்கூட முடியாத மாநிலம் தமிழ்நாடு.. 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும் - ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: மாநிலங்களை முனிசிபாலிட்டி ஆக்கவும், மாநில கட்சிகளை ஒழிக்கவும் பாஜக முயற்சி செய்கிறது. ஆனால் பாஜகவால் தொடக்கூட முடியாத மாநிலமாக தமிழ்நாடு தான் இருந்து வருகிறது என ஸ்டாலின் பேசினார். மேலும் திமுகவை இன்னும் பல ஆண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. 7-வது முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கும் என்று ஸ்டாலின் பேசினார்.

விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தென் மண்டலத்தைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்து இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

DMK Will Form Government for the Seventh Time Says CM Stalin at Youth Wing Conference

விருதுநகர் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது காமராஜர் தான். இந்த
காமராஜர் ஆட்சி என்றால் நினைவுக்கு வருவது மதிய உணவு திட்டம்.. காமராஜர் ஆட்சியில் எப்படி மதிய உணவு திட்டம் நினைவுக்கு வருகிறதோ, அதேபோல் திராவிட ஆட்சி என்றாலே காலை உணவு திட்டம்.

இளைஞரணி தொடங்கப்பட்டபோது விருதுநகர் மாவட்டத்தில் எனது காலடி படாத கிராமமே இல்லை. எப்போது இங்கு வந்தாலும் பாசத்தையும், நேசத்தையும் குறைவின்றி விருதுநகர் மக்கள் கொடுப்பார்கள். விருதுநகர் மண்ணில் மருது சகோதரர்கள் போன்று பணியாற்றிய கேகேஎஸ்எஸ்ஆர் மற்றும் தங்கம் தென்னரசுக்கு எனது பாராட்டுக்கள்.

விருதுநகரில் மாநாடு நடந்தால் அடுத்த தேர்தலில் வெற்றி என்பது உறுதி. 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 200 தொகுதிகளில் வெல்வதே நமது இலக்கு, அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். புதிய சாதனை படைக்க நீங்கள் தயாரா.. அதற்காக உழைக்க தயாராக இருக்கிறீர்களா நான் தயார்..

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டு இருக்கிறது. எந்த துறையை கொடுத்தாலும் அதில் தனி முத்திரை பதிக்கக் கூடியவர் தான் தங்கம் தென்னரசு..

இங்க கூடியிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பார்த்து பார்த்த வளர்த்த இளைஞர் அணியில் இன்று உங்களை பார்க்கும் போது இந்த மகிழ்ச்சி டபுள் ஆகுது.. ட்ரிபுள் ஆகுது.

நம் திராவிட இனத்தின் மேன்மைக்காக, தமிழ் மொழியின் மேன்மைக்காக, தனித்துவமான தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக உங்களை எல்லாம் கொள்கை பிடிப்போடும், கழகப் பற்றோடும் வளர்த்து இருக்கிறார் நம் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்.. உதயநிதி செயல்பாடுகளை தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்.

சும்மா பெயரளவுக்கு இளைஞர்களை சேர்த்தால் போது என்று அவர் செயல்படவில்லை. பூத் லெவலில் தொடங்கி மாநில அளவு வரைக்கும் செலக்ட் செய்து, பயிற்சி அளித்து "நியூ ஏஜ் திராவிட ஸ்டாக்" ஆக உருவாக்கி தந்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

நீங்கள் ஒவ்வொருவரும் பெரியாருடைய கொள்கை வாரிசுகள், அண்ணாவுடைய கொள்கை வாரிசுகள். கருணாநிதியின் கொள்கை வாரிசுகள். நீங்கள் தான் அடுத்து நம் கழகத்தையும், தமிழ்நாட்டையும் காக்க போறிங்க..

பாஜகவினரால் தொட முடியாத ஒரே மாநிலம் தமிழ்நாடு தான். இந்தி திணிப்பு எனும் ஆபத்து இப்போதும் உள்ளது. மும்மொழி கொள்கை என்ற பெயரில் இந்தியை திணிக்கும் கத்தி நம் தலைமீது தொங்கிக்கொண்டு இருக்கிறது. திமுகவை இன்னும் பல ஆண்டுகளுக்கு எந்த கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. 7-வது முறையும் திமுக தான் ஆட்சி அமைக்கும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+