சந்திராயன் 2 மூலம் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய வாய்ப்பு.. மயில்சாமி அண்ணாதுரை
ஸ்ரீவில்லிபுத்தூர்: வரும் 22-ம் தேதி விண்ணில் பாய உள்ள சந்திராயன் 2 மூலம், சுற்றுலா மையம் அமைய வாய்ப்புள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார்.
கடந்த 2008-ம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திராயன் நிலவில் நீர் உள்ளது என்பதை கண்டறிந்தது. இதனை அடுத்து மற்ற உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் நிலவுக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு முடிவை எடுக்க, இந்தியா பெரும் உந்துசக்தியாக இருந்தது என்றார் மயில்சாமி அண்ணாதுரை.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் பங்கேற்றார் மயில்சாமி அண்ணாதுரை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் திங்கட்கிழமை விண்ணில் பாய உள்ள சந்திராயன் 2 விண்கலம் நிலவில் இயற்கையான விண்வெளி ஆய்வு நிலையம் அமைய உதவியாக இருக்கும்.
விண்ணில் சுற்றுலா செல்லவும் இது உதவி புரியும். சுமார் 50 ஆண்டுகளுக்கு பின் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய அதே தென்துருவத்தில், நமது சந்திராயன்-2 விண்கலம் யாருமே இதுவரை யாருமே இறங்கி ஆய்வு செய்யாத இடத்தில் ஆய்வு மேற்கொள்ள இருப்பது மிக முக்கிய தருணம்.
இதனால் இந்தியாவை பார்த்து சுமார் 70-க்கும் மேற்பட்ட நாடுகள் தாங்களும் இது போன்ற முயற்சியை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். இதனால் இந்திய வான்வெளி ஆராய்ச்சி தவிர தனியார் சிலரும் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
வருங்காலத்தில் தனியார் வான்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் இந்திய மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி பயன்படுத்தினால் அவர்கள் ஒரு பெரிய விண்வெளி விஞ்ஞானியாக வர வாய்ப்பு உள்ளது என்றார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி குறித்து பேசிய அவர் கருத்தரங்கம் மற்றும் அறிவியல் கண்காட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு காப்புரிமை பெறுவது, அதனை தொழில் ரீதியாக எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். இதற்கு தமிழ்நாடு அறிவியல் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications