விறுவிறுப்பான கட்டத்தில் நிர்மலா தேவி வழக்கு.. 9ம் தேதி முதல் விசாரணை தொடங்கும்
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு வழி நடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலா தேவி உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய 3 பேரும் இன்று வழக்கறிஞர்களுடன் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசாரால் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அதன் நகல் 3 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 3 பேர் மீதும் நீதி மன்றத்தின் சார்பில் இன்று குற்றச்சாட்டு வரைவு (CHARGE FRAME ) பதிவு செய்யப்பட இருந்த நிலையில் 2 வது குற்றவாளியான உதவிப் பேராசிரியர் முருகன் தனது மனைவியின் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்றிருப்பதால் ஆஜராகாவில்லை.

இதையடுத்து வழக்கு விசாரணையை ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி பரிமளா வரும் 9ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வரும் 9ஆம் தேதி குற்றவாளிகள் 3 பேர் மீதும் நீதிமன்றத்தின் சார்பில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற உள்ளது.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட சூழலில் நிர்மலா தேவியின் வழக்கு வேகமெடுக்க தொடங்கி இருப்பதாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications