தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமா?... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்
விருதுநகர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் ஊராட்சி செயலாளர்கள் குடிநீர் பிரச்சனையை சரிவர கவனிக்காமல் செயற்க்கையான குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி அரசு மீது பழி போட நினைக்கிறார்கள் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ் ஆர் ராஜவர்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க்குகள் தேர்ந்து எடுக்கப்பட்ட பஞ்சயாத்து தலைவர்கள் போல் செயல்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து கிளார்க்குகள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாமல் குடிநீர் பஞ்சம் என கூறி தமிழக அரசு மீது பழி போடுகின்றனர் எனக் குற்றம் சாட்டிய அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி, ஒரு சில இடங்களில் பஞ்சாயத்து செயலாளர்கள் பணி செய்வது இல்லை என்றார்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மின்மோட்டார் பயன்படுத்தி சில வீடுகளில் குடிநீர் பிடிப்பதால் பல வீடுகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. முறைகேடாக மின் மோட்டர் பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தில் மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் திருடும் விடுகளின் மின் மோட்டாரை பறிமுதல் செய்து, அவர்கள் தண்ணீர் இணைப்பை ரத்து செய்து மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை அபாரதம் விதிக்க வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அறிவுரை வழங்கினார்
மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதால் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்துடன் செயற்கையான தண்ணீர் பஞ்சமும் உருவாகியுள்ளது என விருதுநகரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications