தமிழகத்தில் தண்ணீர் பஞ்சமா?... அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி பலே பதில்
விருதுநகர்: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத காரணத்தால் ஊராட்சி செயலாளர்கள் குடிநீர் பிரச்சனையை சரிவர கவனிக்காமல் செயற்க்கையான குடிநீர் பஞ்சத்தை உருவாக்கி அரசு மீது பழி போட நினைக்கிறார்கள் என்று அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவஞானம் முன்னிலையில், பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ் ஆர் ராஜவர்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

விருதுநகர் மாவட்டத்தில் சில பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க்குகள் தேர்ந்து எடுக்கப்பட்ட பஞ்சயாத்து தலைவர்கள் போல் செயல்பட்டு வருகின்றன. பஞ்சாயத்து கிளார்க்குகள் தங்கள் பணியை ஒழுங்காக செய்யாமல் குடிநீர் பஞ்சம் என கூறி தமிழக அரசு மீது பழி போடுகின்றனர் எனக் குற்றம் சாட்டிய அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி, ஒரு சில இடங்களில் பஞ்சாயத்து செயலாளர்கள் பணி செய்வது இல்லை என்றார்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தில் மின்மோட்டார் பயன்படுத்தி சில வீடுகளில் குடிநீர் பிடிப்பதால் பல வீடுகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில்லை. முறைகேடாக மின் மோட்டர் பயன்படுத்தி விருதுநகர் மாவட்டத்தில் மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் திருடும் விடுகளின் மின் மோட்டாரை பறிமுதல் செய்து, அவர்கள் தண்ணீர் இணைப்பை ரத்து செய்து மீண்டும் இணைப்பு வழங்க 15 ஆயிரம் வரை அபாரதம் விதிக்க வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.டி.இராஜேந்திர பாலாஜி அறிவுரை வழங்கினார்
மின் மோட்டர் பயன்படுத்தி தண்ணீர் எடுப்பதால் தற்போது நிலவும் தண்ணீர் பஞ்சத்துடன் செயற்கையான தண்ணீர் பஞ்சமும் உருவாகியுள்ளது என விருதுநகரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications