நவராத்திரி விழா.. கன மழை எதிரொலி.. சதுரகிரி மழைக்குச் செல்ல தற்காலிக தடை
Recommended Video
ஸ்ரீவில்லிபுத்தூர்: நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வருகின்ற 8ம் தேதி வரை சதுரகிரி மலை கோவிலுக்கு சாமி தரிசனம் செய்து வர அனுமதி வழங்க்பட்டுள்ளது.
ஆனால், கனமழை காரணமாக சதுரகிரி மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருப்பதால் தற்காலிகமாக பக்தர்கள் மலைக்கு செல்ல தடை விதிக்கப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 5000 மீட்டர் உயரத்தில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு கடந்த 4 நாட்களாக பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்திருந்த நிலையில் நேற்று முந்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சதுரகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக சதுரகிரி மாங்கனி ஓடை, சங்கிலிப்பாறை, வழுக்குப் பாறை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சதுரகிரி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற 60 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கீழே இறங்காமல் நவராத்திரி திருவிழாவுக்காக மலைப் பகுதியில் கோவிலில் தங்கி தரிசனம் செய்து வருகிறார்கள்.
மேலும் நீர்வரத்து குறையும் வரை யாரும் இறங்க வேண்டாம் என வனத்துறை சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக விருதுநகர் தீயணைப்பு துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழு தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சதுரகிரி கோயிலுக்கு செல்லும்வரை பக்தர்களின் பாதுகாப்பிற்காக தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் தாணிப்பாறை பகுதியில் நீர் வரத்து குறையும் வரை பக்தர்கள் மேலே சென்று சாமி தரிசனம் செய்துவர தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications