சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலி - 2 பேர் கைது
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர்: சிவகாசி அருகே எம் துரைச்சாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 2 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.
சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட எம் துரைச்சாமிபுரம் பகுதியில் ராஜு என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்படும். இந்த ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பணி முடிந்து தொழிலாளர்கள் சென்ற நிலையில் அறையில் வைத்திருந்த மீதி மருந்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வீரியம் கூடியுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள கதவுகளை திறக்க தொழிலாளர்கள் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வைத்திருந்த மீதி மருந்தின் காரணமாக திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாகின. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி தொழிலாளர் தர்மராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்க தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகன், கந்தசாமியை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிவிபத்து தொடர்பாக வருவாய்த் துறையினர் சம்பவ இடம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்ற சிவகாசியில் கடந்த 2 மாதத்தில் 7க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 37க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் தீக்காயம் அடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்துள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications