Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உடல் கருகி தொழிலாளி பலி - 2 பேர் கைது

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: சிவகாசி அருகே எம் துரைச்சாமிபுரத்தில் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 2 பேர் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் 2 பேரை கைது செய்துள்ளனர்.

சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட எம் துரைச்சாமிபுரம் பகுதியில் ராஜு என்பவருக்கு சொந்தமான தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பேன்சி ரக பட்டாசு தயாரிக்கப்படும். இந்த ஆலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

 Sivakasi firecracker factory blast one died 2 injured

இந்த நிலையில் நேற்று பணி முடிந்து தொழிலாளர்கள் சென்ற நிலையில் அறையில் வைத்திருந்த மீதி மருந்தில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப வீரியம் கூடியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை பட்டாசு ஆலையில் உள்ள கதவுகளை திறக்க தொழிலாளர்கள் 3 பேர் சென்றுள்ளனர். அப்போது அங்கு வைத்திருந்த மீதி மருந்தின் காரணமாக திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 5 அறைகள் தரைமட்டமாகின. கட்டிட இடர்பாடுகளில் சிக்கி தொழிலாளர் தர்மராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ பரவாமல் இருக்க தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து குறித்து மாரனேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முருகன், கந்தசாமியை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வெடிவிபத்து தொடர்பாக வருவாய்த் துறையினர் சம்பவ இடம் வந்து ஆய்வு மேற்கொண்டனர். பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்து தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பட்டாசு உற்பத்திக்கு புகழ் பெற்ற சிவகாசியில் கடந்த 2 மாதத்தில் 7க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலை விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 37க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். மேலும் பலர் தீக்காயம் அடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு வாழ்க்கையை இழந்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+