தம்பி லீவு விட்டாச்சு.. போய் ஹோம் ஒர்க் பண்ணு.. மாணவனை தட்டி கொடுத்து கண்டிப்பையும் காட்டிய கலெக்டர்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: கனமழை பெய்வதை காரணம் காட்டி விடுமுறை கேட்ட பள்ளி மாணவருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கலகலப்பான பதிலை அளித்துள்ளார். இதை கேட்ட மாணவர்கள், "அப்பாடா, நல்லவேளை இவர் நமக்கு ஆசிரியராக இல்லை" என நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

வங்கக் கடலில் நிலவி வரும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மிக பலத்த மழை பெய்யும் என 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பள்ளிகளுக்கு விடுமுறை

இன்றைய தினம் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதால் வானிலை மைய இயக்குநராக இருந்த ரமணனை மாணவர்கள் கொண்டாடினர். அவரது அறிவிப்புகளை உற்று நோக்கினர்.

பள்ளி மாணவர்கள்

பள்ளி மாணவர்கள்

தற்போது கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவர்கள் விடுமுறையில் இருந்து வந்தார்கள். தற்போது கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளி செல்கிறார்கள். ஆனாலும் மழை காலம் என வந்தவுடன் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும் என்ற குஷி தொற்றிக் கொள்கிறது.

விருதுநகர் மாவட்டம்

விருதுநகர் மாவட்டம்

இதற்கு சிறந்த ஒரு உதாரணம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது. விருதுநகரை சேர்ந்த ஒரு மாணவர், சார் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்திருந்தார். இதை சுட்டிக் காட்டி மாணவர் ஒருவர் விருதுநகர் ஆட்சியருக்கு டிவிட்டர் மூலம் சார் விருதுநகரிலும் கனமழை பெய்து வருகிறது என கூறி விடுமுறையை அறிவிக்குமாறு மறைமுகமாக அந்த மாணவர் கேட்டிருந்தார்.

Recommended Video

    சார்.. ஸ்கூல் லீவா…? கேள்வி கேட்ட மாணவருக்கு கலெக்டர் கொடுத்த ஷாக் பதில்!
    விடுமுறைக்கு தொடர் பிரார்த்தனை

    விடுமுறைக்கு தொடர் பிரார்த்தனை

    இதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத் ரெட்டி, விடுமுறைக்காக உங்கள் தொடர் பிரார்த்தனைகளுக்கு நன்றி, நம்முடைய மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. எனவே பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (26 ம் தேதி) மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயன்படுத்தி வீட்டுப் பாடத்தை முடியுங்கள். ஆசிரியர்கள் அதை சரிபார்ப்பார்கள் . பாதுகாப்பாக இருங்கள் என பதில் தெரிவித்துள்ளார்.

    ஜாலி ட்வீட்

    ஜாலி ட்வீட்

    ஏற்கெனவே ஒரு முறை இதே விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு மாணவர் ஆட்சியர் மேகநாத் ரெட்டியிடம் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்படுமா என ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார், அதற்கு அவர் நாளை உனது பெற்றோருடன் வந்து என்னை சந்திக்கவும் என ஜாலியாக பதில் அளித்ததும் மாணவர் அலறி அடித்து ஓடியதும் குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+