Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விருதுநகரில் கிணற்றில் விழுந்த மகள்.. காப்பாற்ற குதித்த மாமியார்.. பின்னாடியே குதித்த மருமகன்

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசம்மாள், கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்றினார். ஆனால் நீச்சல் தெரியாத நிலையில், மனைவியை காப்பாற்றுவதாக நினைத்து மருமகன் குதித்துள்ளார். இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ராசம்மாள், மருமகனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கினார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 58 வயதாகும் ராசம்மாளுக்கு 33 வயதில் மகேஷ் என்ற மகள் உள்ளார். மகேஷின் கணவர் ராஜாவுக்கு 38 வயது ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் பிரதீப் என்ற மகன் உள்ளான்.

Virudhunagar well water

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் செய்வது கேரளாவில் தான்... ராஜா கேரளாவில் வேலை செய்து வருவதால், தனது மனைவி மற்றும் மகனை அவரது தாயார் வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். பின்னர் அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள ராஜா கேரளாவில் இருந்து மடத்துப்பட்டிக்கு வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை மடத்துப்பட்டி காளியம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்க மகேஷ், தனது தாயார் ராசம்மாள், மகன் பிரதீப் ஆகியோருடன் சென்றிருக்கிறார். துணி துவைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் மகேஷ் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் ராசம்மாள், மகேசின் கையை பிடித்து காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக ராசம்மாளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனால் இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதற்கிடையே அங்கிருந்த மகேசின் மகன் பிரதீப், உடனடியாக வீட்டுக்கு ஓடி சென்று தந்தை ராஜாவிடம் தெரிவித்து, அவரை அழைத்து வந்துள்ளார்

அவரும் விரைந்து வந்து, நீச்சல் தெரியாத நிலையிலும், தனது மனைவி, மாமியாரை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்திருக்கிறார்.. இதற்கிடையே ராசம்மாளுக்கு நீச்சல் தெரியும் என்பதால், தண்ணீரில் தத்தளித்த தனது மகள் மகேசை கரையில் பத்திரமாக ஏற்றிவிட்டார். நீச்சல் தெரியாமல் குதித்து கிணற்றுக்குள் தத்தளித்த மருமகன் ராஜாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு ராஜா மற்றும் ராசம்மாள் ஆகியோரை பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதற்றத்தில் மருமகன் ராஜா கிணற்றில் குதிக்காமல் இருந்திருந்தால், இருவருமே பிழைத்திருப்பார்கள்.. நீச்சல் தெரியாதவர்கள் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர்களும் , அவர்களை காப்பாற்ற முயல்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+