விருதுநகரில் கிணற்றில் விழுந்த மகள்.. காப்பாற்ற குதித்த மாமியார்.. பின்னாடியே குதித்த மருமகன்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசம்மாள், கிணற்றில் தவறி விழுந்த மகளை காப்பாற்றினார். ஆனால் நீச்சல் தெரியாத நிலையில், மனைவியை காப்பாற்றுவதாக நினைத்து மருமகன் குதித்துள்ளார். இதனால் அவரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய ராசம்மாள், மருமகனுடன் சேர்ந்து தண்ணீரில் மூழ்கினார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்த 58 வயதாகும் ராசம்மாளுக்கு 33 வயதில் மகேஷ் என்ற மகள் உள்ளார். மகேஷின் கணவர் ராஜாவுக்கு 38 வயது ஆகிறது. இவர்களுக்கு 10 வயதில் பிரதீப் என்ற மகன் உள்ளான்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் செய்வது கேரளாவில் தான்... ராஜா கேரளாவில் வேலை செய்து வருவதால், தனது மனைவி மற்றும் மகனை அவரது தாயார் வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். பின்னர் அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்ள ராஜா கேரளாவில் இருந்து மடத்துப்பட்டிக்கு வந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை மடத்துப்பட்டி காளியம்மன் கோவில் அருகில் உள்ள கிணற்றில் துணி துவைக்க மகேஷ், தனது தாயார் ராசம்மாள், மகன் பிரதீப் ஆகியோருடன் சென்றிருக்கிறார். துணி துவைத்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் மகேஷ் தவறி விழுந்ததாக சொல்லப்படுகிறது.
இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த தாயார் ராசம்மாள், மகேசின் கையை பிடித்து காப்பாற்ற முயன்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக ராசம்மாளும் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதனால் இருவரும் கிணற்றுக்குள் மூழ்கி தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்தனர். இதற்கிடையே அங்கிருந்த மகேசின் மகன் பிரதீப், உடனடியாக வீட்டுக்கு ஓடி சென்று தந்தை ராஜாவிடம் தெரிவித்து, அவரை அழைத்து வந்துள்ளார்
அவரும் விரைந்து வந்து, நீச்சல் தெரியாத நிலையிலும், தனது மனைவி, மாமியாரை காப்பாற்றுவதற்காக கிணற்றுக்குள் குதித்திருக்கிறார்.. இதற்கிடையே ராசம்மாளுக்கு நீச்சல் தெரியும் என்பதால், தண்ணீரில் தத்தளித்த தனது மகள் மகேசை கரையில் பத்திரமாக ஏற்றிவிட்டார். நீச்சல் தெரியாமல் குதித்து கிணற்றுக்குள் தத்தளித்த மருமகன் ராஜாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கிவிட்டார்கள்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் ஏழாயிரம்பண்ணை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர தேடுதலுக்கு பிறகு ராஜா மற்றும் ராசம்மாள் ஆகியோரை பிணமாக மீட்டனர். இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பதற்றத்தில் மருமகன் ராஜா கிணற்றில் குதிக்காமல் இருந்திருந்தால், இருவருமே பிழைத்திருப்பார்கள்.. நீச்சல் தெரியாதவர்கள் கிணற்றில் குதித்து காப்பாற்ற முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர்களும் , அவர்களை காப்பாற்ற முயல்பவர்களுக்கும் சிக்கல் ஏற்படும்.
-
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு!












Click it and Unblock the Notifications