F 35 டூ பி-1 பாம்பர் வரை.. 150 விமானங்களை வைத்து வெனிசுலாவை கைப்பற்றிய டிரம்ப்! நள்ளிரவில் திக்திக்
வாஷிங்டன்: அமெரிக்கா தனது அண்டை நாடான வெனிசுலாவை கைப்பற்றி உள்ளது. அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸை கைது செய்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலாவை கைப்பற்றி உள்ளார். இதற்காக நள்ளிரவில் எஃப் 35 முதல் பி -1 பாம்பர் வரை 150க்கும் அதிகமான விமானங்களை அமெரிக்கா பயன்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த வேண்டும் என்றாலே பெரிய பிளான் வேண்டும். அப்படியென்றால் அண்டை நாட்டுக்குள் நுழைந்து அதன் பாதுகாப்பு அரண்களை உடைத்து அதிபரையே கைது செய்ய முடியுமா? என்றால் முடியும் என்கிறது அமெரிக்கா. அதோடு தற்போது வெற்றிகரமாக அதனை செய்து முடித்துள்ளது.

அமெரிக்கா, வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்துள்ளது. அமெரிக்கா - வெனிசுலா இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவின்பேரில் நள்ளிரவில் போர் விமானங்கள் மூலமாக வெனிசுலாவின் தலைநகர் கராகஸ் தாக்கப்பட்டது. 7 இடங்களில் குண்டுகள் வீசப்பட்டது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்க படைகள் கைது செய்து நாடு கடத்தியது. இது தான் தற்போது சர்வதேச அளவில் பேசும் பொருளாகி உள்ளது. வெனிசுலாவும், அமெரிக்காவும் பக்கத்து பக்கத்து நாடுகள். இருநாடுகளை கரிபீயன் கடல் தான் பிரிக்கிறது. வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் சப்ளை இருப்பதோடு, சட்டவிரோத குடியேற்றமும் உள்ளது. இதனால் தான் அமெரிக்கா வெனிசுலா மீது கடும் கோபம் கொண்டது.
இந்நிலையில் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி அதன் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் மனைவி சிலியா ஃபுளோரஸை கைது செய்தது எப்படி என்பது பற்றி அமெரிக்க கூட்டு படை தளபதிகளின் தலைவரான ஜெனரல் டான் கெய்ன் விளக்கினார். இதுபற்றி அவர் கூறுகையில்,‛‛வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவியை கைது செய்ய இரவோடு இரவாக நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் பல மாதங்களாக திட்டமிட்டு துல்லியமாக அதனை செயல்படுத்தி உள்ளோம்.
வெனிசுலாவை தாக்குவதற்கு அமெரிக்கப் படைகள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு முழுவதும் தயார் நிலையில் இருந்தது. ஆனால் சரியான காலநிலை வரவில்லை. நேற்று இரவு விமானங்கள் பறக்க சாதகமான வானிலை கிடைத்தது. இதனால் உயரம் குறைவாக ஹெலிகாப்டர்கள் பறந்தன. அதற்கு மேல்பகுதியில் போர் விமானங்கள் பறந்து பாதுகாப்பு வழங்கின.
இதற்காக 20 வெவ்வேறு தளங்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. விமானப் படையின் F-22, F-35 மற்றும் F-18 போர் விமானங்கள், B-1 குண்டுவீச்சு விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டன. மதுரோவையும் அவரது மனைவியையும் கைது செய்யும் பொறுப்பை கொண்ட ஹெலிகாப்டர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தான் இந்த விமானங்களின் பணியாக இருந்தது.''என்றார்.
-
Iran us war: போரில் ஜெயிச்சுட்டோம்.. அணு ஆயுதம் வைத்துக்கொள்ள மாட்டோம் என ஈரான் சம்மதம்.. டிரம்ப் பேச்சு! -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
ஈரானை காலி பண்ணாம விடாதீங்க.. டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி பட்டத்து இளவரசர்? ஏன் தெரியுமா? -
Iran: அமெரிக்காவின் F18 போர் விமானத்தை குருவியை சுடுவது போல சுட்டு வீழ்த்திய ஈரான் ராணுவம்.. வீடியோ! -
ஈரானின் உச்ச தலைவராக.. என்னை பொறுப்பேற்க சொன்னார்கள்! நான்தான் வேண்டாம் என சொல்லிட்டேன் - டிரம்ப் -
அமெரிக்காவின் அஸ்திவாரமே ஆடிடுமே.. "போரை முடிவுக்கு கொண்டு வர ரெடி.." ஈரான் போட்ட 7 கண்டிஷன்கள் -
வெறும் 20 நிமிடங்களில் ரூ.840 கோடி லாபம்.. டிரம்ப்பால் போரை வைத்து பணம் பார்க்கும் மர்ம டிரேடர்! -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
"நீங்க சொல்வதை எல்லாம் கேட்க முடியாது.." கண்டிஷன் போட்ட அமெரிக்கா.. திட்டவட்டமாக நிராகரித்த ஈரான்! -
போர் ஒருபக்கம் இருக்கட்டும்.. 10 கப்பல்களில் எண்ணெய் பரிசாக கொடுத்த ஈரான்! டிரம்ப் பெருமிதம் -
லாட் டவுன் வந்துருச்சு..கொஞ்சம் கொஞ்சமாய் முடங்கும் உலக நாடுகள்! பெட்ரோல், டீசலால் ஒர்க் ஃப்ரம் ஹோம் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications