30 ஆண்டுகளில் 90 கொலைகள்... அமெரிக்காவின் கொடூர சீரியல் கில்லர் மரணம்!
வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றில் மிக அதிகமான கொலைகள் செய்த கொடூர சீரியல் கில்லர் சாமுவேல் லிட்டில் உடல்நலக்குறைவால் இறந்தார். அவருக்கு வயது 80.
1970 மற்றும் 2005 க்கு இடையில் 93 கொலைகளை இவர் செய்து இருக்கிறார். நீரிழிவு நோய், இதயக் கோளாறு மற்றும் பிற வியாதிகளால் பாதிக்கப்பட்டு அவர் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 3 பெண்களைக் கொலை செய்ததற்காக, கடந்த 2014-ம் ஆண்டு கைதுசெய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் சாமுவேல் லிட்டில் . அதன்பிறகு அவர் கொடுத்த வாக்குமூலம்தான் விசாரணை அதிகாரிகளையே தூக்கிவாரி போட்டது. அதாவது 1970 மற்றும் 2005 க்கு இடையில் 93 கொலைகளைச் செய்திருப்பதாக அவர் கூறினார்.
அமெரிக்காவின் 19 மாகாணங்களில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், போதைக்கு அடிமையானவர்கள் என 93 பேரைக் அவர் கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கில்,முதலில் வாய் திறக்காமல் அமைதிகாத்த சாமுவேலிடம், கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 700 மணி நேரத்துக்கும் மேலாக மேற்கொண்ட விசாரணையின் முடிவிலேயே கொலைகள் குறித்த தகவல்கள் வெளியே வந்திருக்கிறது.
சாமுவேலின் நினைவுத்திறன் அபாரமானது. கொலைகள் நடந்த இடங்கள், கொலை செய்யப்பட்ட பெண்கள் என 1970-களில் நடந்த சம்பவங்களைக்கூட திரையில் ஓடும் காட்சிகளைப் போல் அவர் அதிகாரிகளிடம் விவரித்தார். ஓவியம் வரைவதில் ஈடுபாடு இருப்பதாக சாமுவேல், தான் கொலை செய்த 50-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை வரைந்து கொடுத்திருக்கிறார்.
அவர் செய்த கொலைகளில் 60 கொலைகள் இதுவரை உறுதிப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் சாமுவேல் லிட்டில் உயிரிழந்துள்ளார். நீரிழிவு நோய், இதயக் கோளாறு மற்றும் பிற வியாதிகளால் பாதிக்கப்பட்ட சாமுவேல், கலிபோர்னியா மருத்துவமனையில் இறந்தார் என்று மாநில திருத்தங்கள் மற்றும் மறுவாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications