‛பாரத்’ என பெயர் மாறும் இந்தியா? ஐக்கிய நாடுகள் சபை சொல்வது என்ன? வெளியான புதிய தகவல்
வாஷிங்டன்: இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் என்பது தேவையானதாக உள்ளது. இத்தகைய சூழலில் தான் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தி தொடர்பாளர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் 18 ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு சட்டசபை கூட்டம் தொடங்குகிறது. இந்த கூட்டம் 22ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. இந்த கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய மசோதா கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த பெயர் மாற்ற நடவடிக்கையின் பின்னணியாக முக்கிய காரணம் ஒன்று கூறப்படுகிறது. அதாவது நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த 26 கட்சிகள் ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த பெயரால் தான் மத்திய அரசு இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்ற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கு முன்னோட்டமாக தான் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடக்கும் ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு விருந்து வழங்க உள்ளார். இந்த விருந்துக்கான அழைப்பிதழில் ‛President of India' என்பதற்கு பதில் ‛President of Bharat' என அழைப்பிதழ் அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் மோடியின் இந்தோனேசியாவின் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையிலும் Prime Minister of Bharat என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. ‛பாரத்' என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருந்தாலும் கூட மத்திய பாஜக அரசு உள்நோக்கத்துடன் பெயர் மாற்றம் செய்கிறது என எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் தற்போது இது சர்ச்சையாகி விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் ஐக்கிய நாடுகள் சபை இதுபற்றி முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுவாக ஒரு நாட்டின் பெயரில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றால் அதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் என்பது கிடைக்க வேண்டும். அந்த வகையில் தான் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால் ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதல் பெற வேண்டும். இதற்கிடையே தான் இந்தியாவின் பெயரை பாரத் என பெயர் மாற்றுவதற்கான பரிந்துரை வந்தால் என்ன செய்வோம் என்பது பற்றி ஐக்கிய நாடுகளின் பொது செயலாளரான அன்டோனியா குட்குட்டரெஸின் துணை செய்தி தொடர்பாளர் பர்ஹான் ஹக் விளக்கி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛கடந்த ஆண்டு துருக்கி(Turkey) தனது பெயரை துருக்கியே (Turkiye) என மாற்றம் செய்தது. இந்த விஷயத்தில் துருக்கி நாட்டின் அரசால் வழங்கப்பட்ட கோரிக்கையை நாங்கள் ஏற்றோம். இதேபோல் எங்களுக்கு பிற நாடுகளில் இருந்து கோரிக்கைகள் வந்தால் அதனை பரிசீலனை செய்வோம்'' என்றார்.
-
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்?












Click it and Unblock the Notifications