பிரேசிலில் ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா.. இந்தியாவின் நிலைமையும் மோசமாகிறது!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் 126,673,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது
இந்தியாவில் இந்த ஆண்டின் உச்சமாக 62,291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 292 பேர் உயிரிழந்தனர்

உலகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பேயாட்டம் போட்டு வருகிறது. பராசபட்சம் இல்லாமல் அனைத்து நாடுகளையும் கொரோனா தாக்கி வருகிறது.
உலகம் முழுவதும் 126,673,111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2,778,770 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 102,141,604 பேர் குணமடைந்தனர் .
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 73,790 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 1,216 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். பிரேசிலில் உச்சபட்சமாக ஒரே நாளில் 82,558 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,600 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
இந்தியாவில் சில வாரங்களாக அடங்கி இருந்த கொரோனா தற்போது மீண்டும் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் இந்த ஆண்டின் உச்சமாக 62,291 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 292 பேர் உயிரிழந்தனர் இந்தியாவில் 454,249 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 6,187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 70 பேர் உயிரிழந்தனர்
பிரான்சில் 41,869 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்ட்டுள்ளனர். கொரோனாவுக்கு 363 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 23,987 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 457 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஆட்டம் போட்டும் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications