பூமியை நோக்கி வரும் 'அழிவின் கடவுள்'! ஈபிள் டவரை விட பெரிய சைஸ் விண்கல்! விஞ்ஞானிகள் ஷாக்!
வாஷிங்டன்: இந்த உலகில் இதற்கு முன்னர் அழிவு ஏற்பட்டதற்கு காரணமாக விண்கற்கள் இருந்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது ஈபிள் டவரை விட, பெரிய சைஸ் விண்கல் ஒன்று பூமியை நோக்கி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
அப்போஃபிஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த விண்கல், 2029ம் ஆண்டு பூமியை நோக்கி வரும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. எகிப்திய புராணங்களில் வரும் அழிவின் கடவுள் (அப்போஃபிஸ்) பெயரால் இது அழைக்கப்படுகிறது.

இது சுமார் 450 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது, பிரான்சின் ஈபிள் கோபுரத்தை விடவும் பெரியது. ரேடார் படங்கள் இது ஒரு 'நிலக்கடலை' (Peanut) போன்ற வடிவத்தில் இருப்பதை உறுதி செய்துள்ளன. இது இரண்டு விண்கற்கள் ஒன்று சேர்ந்து உருவானதாக இருக்கலாம். இந்த விண்கல் 2029ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 13ம் தேதியன்று இது பூமிக்கு மிக அருகில் வரும். பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 32,000 கி.மீ தொலைவில் இது கடந்து செல்லும்.
நமது ஜிபிஎஸ் (GPS) மற்றும் தொலைக்காட்சி சிக்னல்களை வழங்கும் செயற்கைக்கோள்கள் இருக்கும் வட்டப்பாதையை (35,786 கி.மீ) விடவும் மிக நெருக்கமாக இது பூமியைத் தாண்டிச் செல்லும். இதுதான் இப்போதைய பிரச்சனை. இந்த விண்கல் மிக அருகில் வருவதால், டெலஸ்கோப் இல்லாமலேயே கிராமப்புறங்களில் இருந்து வெறும் கண்ணால் பார்க்க முடியும்.
இது ஒரு மணி நேரத்திற்கு வானில் சுமார் 42 டிகிரி தூரம் நகரும். அதாவது, நம் கையை நீட்டி விரல்களை மடக்கினால் வரும் அளவை விட 4 மடங்கு வேகத்தில் வானில் நகர்வதை நேரலையாகப் பார்க்கலாம். ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இது தெளிவாகத் தெரியும்.
கடந்த 2004-இல் இது கண்டுபிடிக்கப்பட்ட போது மோத வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், 2021-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி, அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு இதனால் எந்த ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், பூமிக்கு பாதிப்பு இல்லை என்றாலும், பூமியின் ஈர்ப்பு விசை அந்த விண்கல்லில் மாற்றங்களை ஏற்படுத்தும். விண்கல்லின் சுழற்சி வேகம் மாறலாம் அல்லது அதில் நிலச்சரிவுகள் ஏற்படலாம்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications