கொரோனா மூன்றாவது அலை உலகம் முழுவதும் 48 லட்சம் பேர் மரணம் - தவிக்கும் அமெரிக்கர்கள்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
வாஷிங்டன்: கொரோனா மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் ஒரே நாளில் 300,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,56,98,287 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை தன் பிடிக்குள் வைத்துள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் 23 கோடி பேர் சிக்கியுள்ளனர். 48 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். பல நாடுகள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

உலகம் முழுவதும் பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் தினசரியும் கொரோனாவால் பலரும் பாதிக்கத் தொடங்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
கொரோனா மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் ஒரே நாளில் 300,299 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,56,98,287 பேராக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 348,887 பேர் மீண்டுள்ளனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 21,25,55,044 பேராக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிப்பால் ஒரே நாளில் 4,572 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் உலகம் முழுவதும் மொத்தம் 48,15,477 பேர் மரணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் ஒரே நாளில் 26,557 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்கு மொத்தம் 4,45,18,061 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 3,39,37,282 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் கொரோனாவால் 258 பேர் மரணமடைந்துள்ளனர். கொரோனாவால் மரணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 719,932 பேராக உயர்ந்துள்ளது.
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 9,004 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,14,45,651 பேராக அதிகரிப்பு.
பிரிட்டனில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு ஒரே நாளில் 30,439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 79,00,680பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் கொரோனாவால் ஒரே நாளில் 25,769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் மொத்தம் 75,86,536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒரே நாளில் 890 பேர் மரணமடைந்துள்ளனர்












Click it and Unblock the Notifications