அமெரிக்காவில் பெரும் சோகம்.. கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33000த்தை தாண்டியது!
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஒரே நாளில் 1283 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,871 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
உலகையே கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 2134971 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஒரு நாளில் மட்டும் 48540 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 143110 பேர் உலகம்முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே மிக அதிபட்சமான பாதிப்பு மற்றும் உயிரிழப்பு மற்றும் நோய் பரவல் வேகம் ஆகியவை அமெரிக்காவில் தான் உள்ளது. கொரோனா வைரஸ் அமெரிக்காவை கடுமையாக சிதைத்துள்ளது.

11 ஆயிரம் பேருக்கு பாதிப்பு
இதுவரை அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் 6,59,219 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 11,071 பேர் பாதிக்கப்பட்டனர். அமெரிக்கா முழுவதும் வியாழக்கிழமை ஒரு நாளில் (தற்போது வரை) 1,283 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 33,871 ஆக உயர்ந்துள்ளது.

13000 பேர் கவலைக்கிடம்
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 57,189 பேர் இதுவரை குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது அமெரிக்காவில் 5,68,159 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 13,369 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 3,3,18,232 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகிலேயே ஒரு நாடு எடுத்த அதிகபட்ச கொரோனா பரிசோதனை ஆகும்.

16ஆயிரம் உயிரிழப்பு
அமெரிக்காவிலேயே நியூயார்க் மாகாணம் தான் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இன்று ஒரு நாளில் மட்டும் 606 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் நியூயார்க்கில் 16,251 பேர் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 2,26,343 பேர் இது வரை அங்கு கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாளில் மட்டும் 7636 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக பாதிப்பு
அமெரிக்காவுக்கு அடுத்து அதிகம் உயிரிழப்பை சந்தித்த நாடாக இத்தாலி உள்ளது. அங்கு இதுவரை 22,130 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் மட்டும் 525 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இதுவரை 1,1,78,403 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 1,68,941 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications