அமெரிக்காவிலும் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபிக்கு அனுமதி!!
வாஷிங்டன்: அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அந்த நாட்டில் கொரோனா நோய்க்கான பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி அளித்து இருப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த சிகிச்சை மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் ஏற்கனவே கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும்போது, அமெரிக்காவில் தற்போதுதான் இந்த சிகிச்சைக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து டொனால் ட்ரம்ப் தெரிவித்து இருக்கும் செய்தியில், ''நமது நாட்டின் பல உயிர்களை சீன வைரஸ் எடுத்துக் கொண்டுள்ளது. உயிர்களை காப்பாற்றும் வகையில் அவசரத்திற்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தற்போது அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகின்றனர். வேகமாக பணியாற்றி வருவதால் அனைத்தும் சாத்தியமாக இருக்கிறது. விரைவில் கொரோனா தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தப்படும்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து ஆய்வு செய்வதற்கு என்று 48 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் உயிரிழப்பை பிளாஸ்மா தெரபி 35 சதவீதம் குறைக்கும். தற்போதைய ஆய்வின்படி ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் இந்த சிகிச்சை பெறுவதற்கு தங்களது பெயரை பதிவு செய்து இருப்பது தெரிய வந்துள்ளது'' என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று வந்திருந்து குணமடைந்தவர்களிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு, அதில் இருந்து பிளாஸ்மா பிரிக்கப்பட்டு, கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதன்மூலம், நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்த பின்னர் இந்த சிகிச்சையை இந்தியாவும் பின்பற்றி வருகிறது. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை போன்ற நகரங்களில் இந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பிளாஸ்மா ரத்த வங்கியும் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார்.
அமெரிக்காவிலும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் தங்களது ரத்தத்தை அளிக்க முன்வர வேண்டும் என்று ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். உலகிலேயே கொரோனாவுக்கு அமெரிக்காவில்தான் குறைந்தளவில் உயிரிழப்பு விகிதம் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இதுவரை 64,000 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்க போர் கப்பல்கள் கண்ணில் மண்ணை தூவிய சீனா.. அசால்டாக ஹார்முஸை கடந்து பயணம்! அது எப்படி -
அமெரிக்காவின் 'ஹார்முஸ்' முற்றுகையில் இங்கிலாந்து பங்கேற்காது.. ட்ரம்ப்புக்கு 'நோ' சொன்ன பிரிட்டன் -
அதிபர் பதவியை இழக்கும் டிரம்ப்? களத்தில் இறங்கிய அந்த 70 பேர் + மாஜி அமெரிக்க உளவு துறை தலைவர்! -
டிரம்ப்பிற்கு பதிலடி கொடுக்க வரும் புதின்? அமெரிக்காவுக்கு ‘செக்’ வைத்த ரஷ்யா! உலக போர் ஆபத்து? -
ஆப்பு வச்சுடுச்சே அமெரிக்கா..ஈரானை வட்டமிட்ட ஸ்டீல் அரக்கன்கள்! படபடவென பறந்த எண்ணெய் ரேட்! சிக்கல்? -
"5 vs 20.." விட்டு கொடுக்காத ஈரான்.. விடாப்பிடியாக இழுக்கும் அமெரிக்கா.. அடுத்து என்ன நடக்கும்? -
ஹார்முஸ் ஜலசந்தியில்.. அமெரிக்கப் படை முற்றுகை.. ட்ரம்ப்பின் அதிரடி அறிவிப்பு.. உலகளவில் பதற்றம்! -
ஈரான் பிடிவாதம்.. விடாமல் காய் நகர்த்திய டிரம்ப்.. உலகையே உலுக்கிய அந்த 20 மணி நேரம்.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications