கொரோனா தினசரி பாதிப்பில் அமெரிக்காவை விஞ்சிய இந்தியா.. ஒரே நாளில் 81,441 பேருக்கு பாதிப்பு!
வாஷிங்டன்: இந்தியாவில் கொரோனா தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 81,441 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் உட்சபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 89,459 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 3,673 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அதிகரிப்பு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் பராசபட்சம் இல்லாமல் கொரோனா தாக்கி வருகிறது. உலகம் முழுவதும் 130,147,630 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு உலகம் முழுவதும் 2,839,127 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 104,874,241 பேர் குணமடைந்துள்ளனர்.
பிரேசிலில் விஸ்வரூபம்
அமெரிக்காவில் தொடர்ந்து கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. அங்கு 76,644 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 955 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு உச்சம் கண்டு வருகிறது. அங்கு ஒரே நாளில் 89,459 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது .பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,673 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இந்தியாவின் நிலை மோசம்
இந்தியாவிலும் கொரோனா தொடர்ந்து அடங்காமல் ஆட்டம் போட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு அமெரிக்காவை விஞ்சியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 81,441 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 468 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 615,798 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன. இங்கிலாந்தில் 4,478 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனாவுக்கு மேலும் 51 பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்சின் நிலை என்ன?
பிரான்சில் 50,659 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு 314 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் புதிதாக 23,649 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கொரோனாவுக்கு மேலும் 501 பேர் இறந்துள்ளனர். ரஷ்யாவில் புதிதாக 9,169 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கொரோனாவுக்கு 383 பேர் பலியாகியுள்ளனர். ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 7,041 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மேலும் 82பேர் உயிரிழந்துள்ளனர்.