நடுவானில் அநாகரீகம்.. "அந்த செயலில்" ஈடுபட்ட இந்திய வம்சாவளி டாக்டர்.. அதுவும் சிறுமி முன்பு.. ஷாக்
வாஷிங்டன்: விமானத்தில் 14 வயது சிறுமி இருந்த சீட்டுக்கு அருகே அமர்ந்திருந்த இந்திய வம்சாவளி மருத்துவர் ஒருவர் சீட்டில் இருந்தபடி சுய இன்பத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை எப்.பி. ஐ கைது செய்துள்ளது.
அமெரிக்க விமானத்தில் சென்று கொண்டிருந்த போது 14-வயது சிறுமி முன்பாக சுய இன்பத்தில் ஈடுபட்டு முகம் சுளிக்கும் வகையில் அநாகரீக செயலில் ஈடுபட்ட இந்திய-அமெரிக்க மருத்துவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் மத்திய விசாரணை அமைப்பான எப்.பி.ஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எப்.பி.ஐ வெளியிட்டுள்ள தகவல் வருமாறு:-

கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் ஹோனோலுலுவில் இருந்து போஸ்டன் நகருக்கு விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் மாஸ்சாசுசெட்ஸ் நகரை சேர்ந்த இந்திய வம்சாவளி மருத்துவரான சுதிப்தா மோஹண்டி என்பவர் பயணம் செய்து உள்ளார். போஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டியோகனெஸ் மருத்துவ மையத்தில் மருத்துவராக பணியாற்றும் இவர் விமானத்தில் பெண் ஒருவருடன் பயணம் செய்து கொண்டு இருந்தார்.
மருத்துவரின் சீட்டிற்கு அடுத்தாற் போல் 14-வயது சிறுமி தனது தாத்தா பாட்டியுடன் பயணம் செய்து கொண்டு இருந்தார். விமானத்தில் பல இருக்கைகளும் காலியாக கிடந்துள்ளது. போஸ்டன் நோக்கி புறப்பட்ட விமானம் நடுவானில் சென்று கொண்டு இருந்த போது, கழுத்து வரை போர்வையை வைத்து மூடிய படி மருத்துவர் மோஹண்டி இருந்துள்ளார். அப்போது அவரது கால்கள் மட்டும் அசைந்துள்ளது.
சிறிது நேரத்தில் போர்வை கீழே விழுந்து இருக்கிறது. அப்போதுதான் அந்த அநாகரீமகான செயலில் மருத்துவர் ஈடுபட்டதை சிறுமி கவனித்து இருக்கிறார். இதைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த சிறுமி உடனடியாக தனது இருக்கையில் இருந்து எழுந்து காலியாக கிடந்த வேறு இருக்கைக்கு சென்று விட்டார். விமானம் போஸ்டனில் தரையிறங்கியதும் விமானத்தில் நடந்த சம்பவம் குறித்து தனது குடும்பத்தினரிடம் சிறுமி தெரிவித்து இருக்கிறார்.
இதைக் கேட்டதும் அதிர்ந்து போன பெற்றோர் உடனடியாக அதிகாரிகளிடம் புகாரளித்தனர். இது குறித்து எப்.பி.ஐ அதிகாரிகள் மருத்துவர்களிடம் விசாரித்த போது தன் மீதான குற்றச்சாட்டை மருத்துவர் மோஹண்டி மறுத்துள்ளார். மேலும் தனக்கு சம்பவம் குறித்து நியாபகம் இல்லை என்றும் கூறியிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த எப்.பி.ஐ அதிரடியாக அண்மையில் கைது செய்து இருக்கிறது.
மேலும் சொந்த பிணையில் நிபந்தனைகளுடன் விடுவித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் கடந்த வியாழக்கிழமை மருத்துவர் மோஹண்டி அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. மூன்று மாதங்கள் சிறை தண்டனை விதிக்க வழி வகை செய்யும் சட்டப்பிரிவின் கீழ் அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications