அமெரிக்க வன்முறை போராட்டக்களத்தில்...இந்திய தேசியக்கொடி...வருண் காந்தி கண்டனம்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் வன்முறை நிகழ்த்திய டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டக்களத்தில் இந்திய தேசியக் கொடியை வைத்து இருந்ததற்கு பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் டிரம்ப் ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறையில் 4 பேர் இறந்து விட்டனர். டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றார். வருகிற 20-ந்தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அவர்களை வெளியேற்ற முயன்றபோது, போலீசாருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர்.
டிரம்ப் ஆதரவாளர்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, அந்த கட்டிடத்தின் முன்பு தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதில் ஒருவர் இந்திய தேசிய கொடியை கையில் வைத்து இருந்தார்.
இதற்கு பாஜக எம்.பி. வருண் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். டிரம்பின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டத்தில் ஒருவர் இந்திய தேசிய கொடியை கையில் வைத்திருப்பது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்ட வருண் காந்தி, அங்கு(அமெரிக்கா) ஏன் நமது தேசியக்கொடி உள்ளது ??? இது நிச்சயமாக நாம் பங்கேற்கத் தேவையில்லாத ஒரு சண்டை'' ட்வீட் செய்துள்ளார். இது என்ன விளையாட்டு போட்டியா? இந்திய தேசியக்கொடியை கையில் வைத்து கொள்ள என்று பல்வேறு தரப்பினரும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications